கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

கர்நாடகாவில் தனியார் பேருந்தில் பயங்கர தீ: 3 பயணிகள் பலி

கர்நாடக மாநிலம் ஹப்பள்ளி நகரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் திடீரென தீப்பற்றியதில் அதில் பயணம் செய்த 3 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:02 pm

PTI

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹப்பள்ளி நகரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் திடீரென தீப்பற்றியதில் அதில் பயணம் செய்த 3 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.

பெங்களூருவில் இருந்து 420 கி.மீ. தொலைவில் உள்ள ஹப்பள்ளி நகரில், தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட தனியார் பேருந்தில், திடீரென தீப்பற்றியது.

தார்வாதில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த இந்த பேருந்தில் நடத்துனர், ஓட்டுநர் மட்டுமின்றி 15 பயணிகள் இருந்தனர். இவர்களில் 3 பேர் தீயில் சிக்கி பலியாகினர். 14 பேர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.