கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

வளர்ச்சிக் குன்றிய 24 வார கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சி குன்றி இருந்தால் கருக்கலைப்பு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:01 pm

PTI

புது தில்லி: கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சி குன்றி இருந்தால் கருக்கலைப்பு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

குறைபாடு பற்றி மருத்துவ அறிக்கையில் குறிப்பிட்டிருந்தால் சிசுவைக் கலைக்கலாம்  என்று 24 வார கால கருவைக் கலைக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு பெண் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை அவருடன் பழகிவந்த நபர் திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் கருவுற்ற அப்பெண், 24 வாரங்களுக்குப் பிறகு அந்தக் கருவைக் கலைக்க முயன்றபோது கருக்கலைப்பு தொடர்பான சட்டம் தடையாக இருந்தது.

20 வாரத்துக்கு மேலான கருவைக் கலைக்கக் கூடாது என்று 1971-ஆம் ஆண்டு மருத்துவ கருக்கலைப்பு சட்டப் பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "நான் மனதளவிலும், உடலளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்குப் பிறக்கும் குழந்தை மூளை, உடல் குறைபாடுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ள மருத்துவர்கள், கருக்கலைப்பு மட்டும் செய்ய மறுத்துவிட்டனர்' என்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக மத்திய அரசுக்கும், மகாராஷ்டிர அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டது. இந்நிலையில், அப்பெண்ணின் வயிற்றில் உள்ள கருவின் நிலை எப்படி உள்ளது என்பது குறித்து மருத்துவ ஆய்வு நடத்த மும்பை கிங் எட்வர்ட் நினைவு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது குறித்து மருத்துவ அறிக்கை கடந்த சனிக்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கருவின் வளர்ச்சி தாயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும், பெண்ணின் உயிருக்கு ஆபத்து நேராமல், கருவைக் கலைக்கலாம் என்றும் மும்பை மருத்துவமனை தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. தெரிவிக்கப்பட்டிருந்ததை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கருவில் உள்ள சிசு குறைபாட்டுடன் இருந்தால் கருக்கலைப்பு செய்யலாம் என்று தீர்ப்பளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.