கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

காபூலில் கடத்தப்பட்ட இந்தியப் பெண் மீட்பு: சுஷ்மா சுவராஜ்

கடந்த மாதம் காபூலில் கடத்தப்பட்ட இந்தியப் பெண் ஜூடித் டிசௌஸா பத்திரமாக மீட்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:47 pm

PTI

புது தில்லி: கடந்த மாதம் காபூலில் கடத்தப்பட்ட இந்தியப் பெண் ஜூடித் டிசௌஸா பத்திரமாக மீட்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

காபூலில் உள்ள சர்வதேச அறக்கட்டளை ஒன்றில் மூத்த தொழில்நுட்ப ஆலோசகராகப் பணியாற்றி வந்தார் இந்தியப் பெண் ஜூடித் டிசௌஸா (40). இவர் கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி கடத்தப்பட்டார்.

இந்த நிலையில், ஜூடித் டிசோஸா பத்திரமாக மீட்கப்பட்டதை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று சுஷ்மா சுவராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும், ஜூடித் டிசோஸாவை மீட்க உதவிய ஆப்கான் அதிகாரிகளுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.