கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

அமெரிக்காவில் இந்திய மென் பொறியாளர் கத்தியால் குத்திக் கொலை

அமெரிக்காவில், ஆந்திர மாநிலம் கச்சிகுடா பகுதியைச் சேர்ந்த 24 வயது மென்பொறியாளர் சங்கீர்த், கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:45 pm

PTI

ஹைதராபாத்: அமெரிக்காவில், ஆந்திர மாநிலம் கச்சிகுடா பகுதியைச் சேர்ந்த 24 வயது மென்பொறியாளர் சங்கீர்த், கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து சங்கீர்த்தின் உறவினர் ஸ்ரீனிவாஸ் கூறுகையில், ஆஸ்டின் பகுதியில் தங்கியிருந்த சங்கீர்த்தை, அவருடன் அறையில் ஒன்றாகத் தங்கியிருந்த ஹைதரபாத்தைச் சேர்ந்த சாய் சந்தீப் கௌட், கத்தியால் குத்திக் கொலை செய்ததாக இன்று காலை எங்களுக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும், அமெரிக்காவில் இருக்கும் எங்களது உறவினர்கள், மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர் என்றார்.

கத்திக் குத்துக் காயத்துடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சங்கீர்த் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார், அவரைக் கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.