டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழை: இதுவரை 30 பேர் பலி, பலர் மாயம்

உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழைக்கு இதுவரை 30 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:37 pm

IANS

டெராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழைக்கு இதுவரை 30 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பித்தோராகர் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சுவா கிராமத்தில் விவசாய பயிர்கள் முற்றிலும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு நாசமாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 54 மீ.மி மழை பதிவாகியுள்ளது.

தால்-முன்ஸ்யாரி சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. 12-க்கு மேற்பட்ட வாகனங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது. யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை பாதிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 30 பேர் பலியாகியுள்ளதாகவும், பலர் அடித்து செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வெள்ளத்தில் சிக்கி தவிப்போர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

மீட்புப் பணியில் ஈடுபட  தேசிய பேரிடர் மீட்புப் படைக்கு உள்துறை அமைச்சர் ராஜ்சிங் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.