பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

உளவு நிறுவனங்களை நீதிமன்றம் மூலம் கண்காணிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

இந்திய உளவு நிறுவனங்களை நீதிமன்றம் மூலம் கண்காணிப்பது என்பது தேசியப் பாதுகாப்பில் குறைவை ஏற்படுத்தும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

Updated On :23 பிப்ரவரி 2016, 2:23 pm

இந்திய உளவு நிறுவனங்களை நீதிமன்றம் மூலம் கண்காணிப்பது என்பது தேசியப் பாதுகாப்பில் குறைவை ஏற்படுத்தும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்திய உளவு நிறுவனங்ககளான ரா, ஐபி மற்றும் என்டிஆர்ஓ ஆகிய அமைப்புகளுக்கு அதிக அளவு நிதி ஒதுக்கப்படும் நிலையில், அவற்றை நீதிமன்ற கண்காணிப்புக்கு உள்படுத்தவும், அதன் செலவுகளை ஆய்வு செய்வதற்கும் உத்தரவிட வலியுறுத்தி தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று கடந்த 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

இன்று அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவ கீர்த்தி சிங் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்ததது. மனுதாரர் சார்பில் பிரபல வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் ஆஜரானார்.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் உள்ள உளவு நிறுவனங்கள் அனைத்தும் நாடாளுமன்றத்தின் கண்காணிப்பில் இயங்குகின்றன. இந்தியாவில் மட்டும் உலவு அமைப்புகள் நாடாளுமன்ற வரம்புக்குள் வருவதில்லை. மேலும், அவை அரசியல் ஆதாயங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என பூஷண் வாதிட்டார்.

இந்த மனுவை ஏற்க விரும்பவில்லை என கூறிய நீதிபதிகள், உளவு அமைப்புகளைக் கண்காணிப்புக்கு உள்படுத்துவது, தேசப் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கக் கூடும் என்றனர்.

பிரிட்டனைப் போன்று இந்தியா இருக்க முடியாது. மத்திய அரசுக்கும், நாடாளுமன்றத்துக்கும் சில அளவுகோல்கள் இருக்க வேண்டும். அனைத்து விஷயங்களையும் நாடாளுமன்றத்தின் வரம்புக்குள் கொண்டு வர முடியாது என்றனர்.

உளவு அமைப்புகளை கண்காணிப்பதற்கு பிற வழிமுறைகள் எதுவும் இல்லை என்று கூறி விட முடியாது. சில விஷயங்களில் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டியது அவசியமாகும். இல்லையெனில், அந்த அமைப்புகளின் நோக்கங்கள் நிறைவேறாமல் போய்விடும்.

மேலும், தேசப் பாதுகாப்புக்கு ஊறு விளைக்கும் இதுபோன்ற மனுக்களை நீதிமன்றங்கள் ஏற்பது சரியல்ல என்று நாங்கள் கருதுகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.