மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

டீ விற்றவர் பிரதமர் ஆனதை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை: மோடி

டீ விற்றவர் பிரதமரானதை நாட்டில் சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. மேலும் தன்னை அவமானப்படுத்துவதற்கும் சதி நடப்பதாகவும் நரேந்திர மோடி கூறினார்.

News image
Updated On :21 பிப்ரவரி 2016, 12:14 pm

டீ விற்றவர் பிரதமரானதை நாட்டில் சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. மேலும் தன்னை அவமானப்படுத்துவதற்கும் சதி நடப்பதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ஒடிசா மாநிலத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டு மோடி பேசியதாவது:

அதிருப்தியாகவுள்ள தொண்டு நிறுவனங்களும், கள்ள சந்தைகாரர்களும் மத்திய அரசின் நிலைத்தன்மையை கெடுக்கவும், என்னை அவமானப்படுத்தவும் சதி செய்கின்றனர்.

ஒரு சாதாராண டீக்கடைக்காரர் நாட்டின் பிரதமர் ஆனதை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை.

பாஜக அரசு அமைந்த பின்னர், வெளிநாடுகளிலிருந்து பணம் பெறும் தனியார் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் கணக்கு விவரங்கள் கேட்கப்பட்டன. இதையடுத்து அவர்கள் அனைவரும் இணைந்து 'மோடியை தாக்கு' என்ற முழக்கத்தை எழுப்பினர்.

மேலும், அரசை நீக்குவதற்கும், என்னை அவமானப்படுத்துவற்கும் சதி செய்து வருகின்றனர்.

ஆனால், எனது சகோதர சகோதரிகளே, நாட்டை பிடித்துள்ள பிணியை நீக்கவே என்னை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். நான் அதைத்தான் செய்து வருகிறேன். எனக்கு எதிராக என்ன கூறினாலும், எனது பாதையிலிருந்து விலகி செல்லாமல் நீங்கள் என்னிடம் ஒப்படைத்தை பணியை நிறைவேற்றுவேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.