நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

டீ விற்றவர் பிரதமர் ஆனதை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை: மோடி

டீ விற்றவர் பிரதமரானதை நாட்டில் சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. மேலும் தன்னை அவமானப்படுத்துவதற்கும் சதி நடப்பதாகவும் நரேந்திர மோடி கூறினார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:35 pm

PTI

டீ விற்றவர் பிரதமரானதை நாட்டில் சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. மேலும் தன்னை அவமானப்படுத்துவதற்கும் சதி நடப்பதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ஒடிசா மாநிலத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டு மோடி பேசியதாவது:

அதிருப்தியாகவுள்ள தொண்டு நிறுவனங்களும், கள்ள சந்தைகாரர்களும் மத்திய அரசின் நிலைத்தன்மையை கெடுக்கவும், என்னை அவமானப்படுத்தவும் சதி செய்கின்றனர்.

ஒரு சாதாராண டீக்கடைக்காரர் நாட்டின் பிரதமர் ஆனதை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை.

பாஜக அரசு அமைந்த பின்னர், வெளிநாடுகளிலிருந்து பணம் பெறும் தனியார் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் கணக்கு விவரங்கள் கேட்கப்பட்டன. இதையடுத்து அவர்கள் அனைவரும் இணைந்து 'மோடியை தாக்கு' என்ற முழக்கத்தை எழுப்பினர்.

மேலும், அரசை நீக்குவதற்கும், என்னை அவமானப்படுத்துவற்கும் சதி செய்து வருகின்றனர்.

ஆனால், எனது சகோதர சகோதரிகளே, நாட்டை பிடித்துள்ள பிணியை நீக்கவே என்னை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். நான் அதைத்தான் செய்து வருகிறேன். எனக்கு எதிராக என்ன கூறினாலும், எனது பாதையிலிருந்து விலகி செல்லாமல் நீங்கள் என்னிடம் ஒப்படைத்தை பணியை நிறைவேற்றுவேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.