நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

மும்பை விமான நிலைய கட்டடத்தில் இருந்து குதித்து உக்ரேனிய தொழிலதிபர் தற்கொலை

மும்பை சர்வதேச விமான நிலையக் கட்டடத்தில் இருந்து குதித்து உக்ரேனியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:32 pm

PTI

மும்பை சர்வதேச விமான நிலையக் கட்டடத்தில் இருந்து குதித்து உக்ரேனியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

மைகாய்லோ செக்ரைஜின் (32) என்ற தொழிலதிபர், சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் டி2 முனையத்தின் வாகன நிறுத்துமிடத்தின் கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் விஷயமாக மும்பை வந்த தொழிலதிபர், தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

விமான நிலையத்தின் கண்காணிப்புக் கேமராவில், அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளும் காட்சி பதிவாகியுள்ளது.

உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.