மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

உ.பி. சிறைக் கைதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: சந்திப்புக்கு இனி தடுப்பு வலை இல்லை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சிறைக் கைதிகள், தங்களது உறவினர்க சந்திக்கும் போது அவர்களுக்கு இடையே இருக்கும் தடுப்பு வலை முறை நீக்கப்படும் என்று சிறைத் துறை அமைச்சர் பல்வந்த் சிங் ரமூவாலியா கூறியுள்ளார்.

Updated On :15 பிப்ரவரி 2016, 9:11 am

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சிறைக் கைதிகள், தங்களது உறவினர்க சந்திக்கும் போது அவர்களுக்கு இடையே இருக்கும் தடுப்பு வலை முறை நீக்கப்படும் என்று சிறைத் துறை அமைச்சர் பல்வந்த் சிங் ரமூவாலியா கூறியுள்ளார்.

காஸியாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ரமூவாலியா கூறுகையில், 122 ஆண்டு காலமாக இருக்கும் தடுப்பு வலை முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு,  சிறைக் கைதிகள் இனி தங்களது உறவினர்கள், நண்பர்களை நேரில் சந்தித்து ஒன்றாக அமர்ந்து பேசலாம் என்று தெரிவித்தார்.

தாஸ்னாவில் உள்ள மாவட்ட சிறைச் சாலையில், சிறைக் கைதிகள் முன் உரையாற்றிய ரமூவாலியா, சிறைக் கைதிகளை உறவினர்கள் சந்திக்க தற்போது வாரத்துக்கு இரண்டு நாட்கள் என்பதை அதிகரிக்கவும் மாநில அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறினார்.

இதன் மூலம், சிறைகளிலும், சிறைச்சாலைக்கு வருவோர் முறைகேடுகளில் ஈடுபடுவது தவிர்க்கப்படும் என்றும், சிறைக் கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனையும் அவ்வப்போது செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதே போல மே 10ம் தேதிக்குள் அனைத்து மாவட்ட சிறைச் சாலைகளிலும்,  சிறைக் கைதிகளுக்கு தொலைபேசி வசதி செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.