டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிடலாமா என்று யோசிக்கிறேன்: அத்வானி வேதனை

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விடலாமா என்று யோசிப்பதாக, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி வேதனை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :15 டிசம்பர் 2016, 9:17 am


புது தில்லி:  நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விடலாமா என்று யோசிப்பதாக, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி வேதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில், உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.

இன்றும், மக்களவையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக, அவை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த எல்.கே. அத்வானி, அருகில் அமர்ந்திருந்த ஸ்மிருதி இராணியிடம், எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விடலாமா என்று யோசிக்கிறேன்? என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இது குறித்து ஸ்மிருதி இராணி, அருகில் இருந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்டம் தெரிவித்தார்.

உடனே, ராஜ்நாத் சிங், அத்வானியை நெருங்கி, அவரை சமாதானப்படுத்த முயன்றார். ஆனாலும், அத்வானி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மேலும், நாளை மக்களவையை சுமூகமாக நடத்தி, ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு சுமித்ரா மகாஜனிடம் தெரிவிக்குமாறு உள்துறை அமைச்சரிடம் தெரிவித்தார்.

நாடாளுமன்ற மக்களவைக் கூட்டம், எந்த விவாதமும் இன்றி நிறைவு பெறுவது 'வாஷ் அவுட்'. இது நடக்கக் கூடாது என்று அத்வானி அருகில் இருந்த பாஜக எம்பிக்களிடம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.