திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மும்பை-கோவா பாலம் இடிந்து விழுந்து விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

மும்பை-கோவா நெடுஞ்சாலையில் உள்ள பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:06 pm

ANI

மும்பை: மகாராஷ்டிர மாநிலம், ராய்கட் மாவட்டத்தின் மஹாட் பகுதி அருகே மும்பை-கோவா நெடுஞ்சாலையில் உள்ள பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

சாவித்ரி நதியின் மீது அமைந்துள்ள ஆங்கிலேயர் காலத்துப் பாலம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இடிந்து விழுந்தது. இதில், பாலத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு பேருந்துகள் ஆற்றுக்குள் விழுந்தன.

இந்த விபத்தில், நீரில் மூழ்கிய 2 பயணிகளின் சடலங்களை மீட்புக் குழுவினர் கண்டெடுத்தனர். இந்நிலையில் இன்று மேலும் இரண்டு பேரின் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளது. பேருந்துகளில் இருந்த 20 பயணிகளின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை.

பேரிடர் மேலாண்மைக் குழு வீரர்களுடன் இணைந்து, கடலோரக் காவல் படை உள்ளிட்ட அமைப்புகளும் மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.