மும்பை-கோவா பாலம் இடிந்து விழுந்து விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
மும்பை-கோவா நெடுஞ்சாலையில் உள்ள பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.


மும்பை: மகாராஷ்டிர மாநிலம், ராய்கட் மாவட்டத்தின் மஹாட் பகுதி அருகே மும்பை-கோவா நெடுஞ்சாலையில் உள்ள பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
சாவித்ரி நதியின் மீது அமைந்துள்ள ஆங்கிலேயர் காலத்துப் பாலம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இடிந்து விழுந்தது. இதில், பாலத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு பேருந்துகள் ஆற்றுக்குள் விழுந்தன.
இந்த விபத்தில், நீரில் மூழ்கிய 2 பயணிகளின் சடலங்களை மீட்புக் குழுவினர் கண்டெடுத்தனர். இந்நிலையில் இன்று மேலும் இரண்டு பேரின் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளது. பேருந்துகளில் இருந்த 20 பயணிகளின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை.
பேரிடர் மேலாண்மைக் குழு வீரர்களுடன் இணைந்து, கடலோரக் காவல் படை உள்ளிட்ட அமைப்புகளும் மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...