புது தில்லி: குஜராத் முதல்வர் பதவியில் இருந்து ஆனந்திபென் படேல் ராஜினாமா செய்திருப்பது குறித்து கருத்துக் கூறியுள்ள ராகுல், அவரை பலியாடு ஆக்குவதால் மட்டும் குஜராத்தில் பாஜகவை காப்பாற்றிவிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலமே பற்றி எரிவதற்கு கடந்த 13 ஆண்டு கால நரேந்திர மோடியின் ஆட்சிதான் காரணம். கடந்த இரண்டு ஆண்டுகளாக குஜராத்தை ஆளும் ஆனந்திபென் படேலின் ஆட்சி இதற்குக் காரணமல்ல. ஆனந்திபென் படேலை பலி கொடுப்பதால் மட்டும் குஜராத்தில் பாஜகவை காப்பாற்றிவிட முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
தனது வயது காரணமாக, முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாகவும், இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவே இந்த முடிவை எடுத்ததாகவும் ஆனந்திபென் படேல் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வேட்டுவம் வெளியீடு எப்போது?
பெட்ரோல் விலை கடுமையாக உயரும்: ராகுல் காந்தி
லுங்கி இங்கிடி நலமுடன் உள்ளார்: ஐபிஎல் நிர்வாகம் தகவல்

மது, சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: ஜிவி பிரகாஷ்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


