கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ஆனந்திபென் படேலை 'பலியாடு' ஆக்குவதால் பாஜக தப்பித்துவிட முடியாது: ராகுல் காட்டம்

குஜராத் முதல்வர் பதவியில் இருந்து ஆனந்திபென் படேல் ராஜினாமா செய்திருப்பது குறித்து கருத்துக் கூறியுள்ள ராகுல், அவரை பலியாடு ஆக்குவதால் மட்டும் குஜராத்தில் பாஜகவை காப்பாற்றிவிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:05 pm

PTI

புது தில்லி: குஜராத் முதல்வர் பதவியில் இருந்து ஆனந்திபென் படேல் ராஜினாமா செய்திருப்பது குறித்து கருத்துக் கூறியுள்ள ராகுல், அவரை பலியாடு ஆக்குவதால் மட்டும் குஜராத்தில் பாஜகவை காப்பாற்றிவிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலமே பற்றி எரிவதற்கு கடந்த 13 ஆண்டு கால நரேந்திர மோடியின் ஆட்சிதான் காரணம். கடந்த இரண்டு ஆண்டுகளாக குஜராத்தை ஆளும் ஆனந்திபென் படேலின் ஆட்சி இதற்குக் காரணமல்ல. ஆனந்திபென் படேலை பலி கொடுப்பதால் மட்டும் குஜராத்தில் பாஜகவை காப்பாற்றிவிட முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

தனது வயது காரணமாக, முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாகவும், இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவே இந்த முடிவை எடுத்ததாகவும் ஆனந்திபென் படேல் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.