டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலைகள் தாற்காலிகமாக மூடல்

இமாச்சலப் பிரதேசத்தில் பலத்த மழை பெய்து வருவதால் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:05 pm

IANS

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் பலத்த மழை பெய்து வருவதால் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள்  தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இமாச்சலில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகின்றது. இதனால், சண்டிகர், மாணலியை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளது.

மாண்டி மாவட்டத்தில் நிலச்சரிவு காரணமாக ஹனோகி கோயிலுக்குச் செல்லும் வழி 6 மணி நேரத்திற்கும் மேலாக மூடப்பட்டது.  சாலைகளைச் சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.  இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.