புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

உத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து: மத்திய அரசு மேல்முறையீடு

உத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து அம்மாநில உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2016, 6:45 am

புது தில்லி : உத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து அம்மாநில உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் ஏ.ஜி. முகுல் ரோஹத்கி மனுவை தாக்கல் செய்தார்.

மனுவில், உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் முழு விவரம் கிடைக்கப்பெறவில்லை. வாய்மொழி உத்தரவின் அடிப்படையில்தான் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை அவசர மனுவாக ஏற்று இன்றே விசாரிக்க வேண்டும் என்று ரோஹத்கி வேண்டுகோள் விடுத்தார். இன்றைய வழக்கு விசாரணை பட்டியலில் இதனை சேர்ப்பதற்கு, உச்ச நீதிமன்ற பதிவாளரை அணுகுமாறு நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவுறுத்தினார்.

இதையடுத்து, பதிவாளரின் அனுமதி பெற்று, இன்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.