உத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து: மத்திய அரசு மேல்முறையீடு
உத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து அம்மாநில உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.


புது தில்லி : உத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து அம்மாநில உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் ஏ.ஜி. முகுல் ரோஹத்கி மனுவை தாக்கல் செய்தார்.
மனுவில், உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் முழு விவரம் கிடைக்கப்பெறவில்லை. வாய்மொழி உத்தரவின் அடிப்படையில்தான் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை அவசர மனுவாக ஏற்று இன்றே விசாரிக்க வேண்டும் என்று ரோஹத்கி வேண்டுகோள் விடுத்தார். இன்றைய வழக்கு விசாரணை பட்டியலில் இதனை சேர்ப்பதற்கு, உச்ச நீதிமன்ற பதிவாளரை அணுகுமாறு நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவுறுத்தினார்.
இதையடுத்து, பதிவாளரின் அனுமதி பெற்று, இன்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...