புது தில்லி: உத்தரகண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது பாஜக முகத்தில் விழுந்த அடி என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
ஜனநாயகத்தை காலில்போட்டு மிதித்தற்கும், இந்திய அரசியல் சாசனத்தை கொலை செய்ததற்கும் பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜ்வாலா கூறியுள்ளார்.
இது உத்தரகண்ட் மக்களுக்கு கிடைத்த வெற்றி. ஜனநயாக அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைப்பதற்கு முயற்சித்த பாஜகவின் முகத்தில் விழுந்த அடி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அருணாசல பிரதேசத்தைப் போன்று உத்தரகண்ட் மாநிலத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாஜக மேற்கொண்ட முயற்சிக்கு முடிவுகட்டப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் அமித் ஷாவும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த ஹரீஷ் ராவத் தொடர்ந்த மனுவை விசாரித்த உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் இன்று அந்த உத்தரவை ரத்து செய்தது.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு மாறாக உத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருப்பதாக உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் 29ம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண் ரயில் ஓட்டுநருக்கு பாலியல் தொல்லை! மூத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்: பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!
காஜிப்பூர் பாலியல் வன்கொடுமை: விசாரணை கோரி ராகுல் வலியுறுத்தல்!

புலி வந்துவிட்டது... தில்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்த மிட்செல் ஸ்டார்க்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


