தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

குப்வாரா மாவட்டத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள லோலாப் பகுதியில் ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

News image
Updated On :21 ஏப்ரல் 2016, 4:52 am

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள லோலாப் பகுதியில் ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

லோலாப் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலின்படி, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, இன்று அதிகாலை ஒரு பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். அவர்களை ராணுவத்தினர் சுற்றி வளைத்து, தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டப்படி தப்பி செல்ல முயன்றனர். இதையடுத்து ராணுவ வீரர்களும் எதிர்தாக்குதல் நடத்தினார்கள்.

இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் அடுத்தடுத்து 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது உடலை ஆய்வு செய்த ராணுவத்தினர் 2 தீவிரவாதிகளும் பாகிஸ்தானில் இயங்கும் லஷ்கர்–இ–தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை கண்டுபிடித்தனர்.

இதற்கிடையே அந்த பகுதியில் மேலும் சில தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதால், தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.