குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி பூரம் திருவிழா: உம்மன் சாண்டி விளக்கம்

கேரள மாநிலம் திருச்சூரில், கோயிலின் பாரம்பரியத்தை விட்டுவிடாமல், அதே போல உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களையும் பின்பற்றி பூரம் திருவிழா கொண்டாடப்படும் என்று அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:01 pm

PTI

திருச்சூர் : கேரள மாநிலம் திருச்சூரில், கோயிலின் பாரம்பரியத்தை விட்டுவிடாமல், அதே போல உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களையும் பின்பற்றி பூரம் திருவிழா கொண்டாடப்படும் என்று அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.

பூரம் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், முதல்வர் உம்மன் சாண்டி, மாநில உள்துறை ரமேஷ் சென்னிதலா, திருச்சூர் மாவட்ட அதிகாரிகள், பூரம் திருவிழா ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய  உம்மன் சாண்டி, உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி பூரம் திருவிழா கொண்டாடப்படும். பாதுகாப்பு என்பது மிக முக்கியமான விஷயமாகும். பூரம் திருவிழாவைக் கொண்டாடுவதற்கு, மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றார் உம்மன் சாண்டி.

கொல்லம், புற்றிங்கல் தேவி கோயிலில் கடந்த 10ஆம் தேதி காலை வாண வேடிக்கையால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 114 பேர் உயிரிழந்ததை அடுத்து, பூரம் திருவிழாவில் பட்டாசுகள் வெடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதை எதிர்த்து, பூரம் திருவிழாவை நடத்தி வரும் பாறமேக்காவு, திருவம்பாடி தேவஸ்தானங்கள் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை, நீதிபதிகள் தோட்டத்தில் பி.ராதாகிருஷ்ணன், அனு சிவராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அதையடுத்து, நீதிபதிகள் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவில், ""125 டெசிபல் அளவுக்கு மிகாமல், குறைவான ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்கலாம். வாண வேடிக்கைகளை நடத்தலாம். மேலும், அங்கீகரிக்கப்படாத ரசாயனங்களால் தயாரிக்கப்படும் பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதியில்லை'' என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.