குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

பருவமழை: தமிழகத்தில் வழக்கைத்தைவிட குறைவாக இருக்கும்

நடப்பு ஆண்டில் இந்தியா முழுவதும் வழக்கத்தைவிட அதிகமான அளவு பருவமழை பெய்யும் என முன்னறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் வழக்கத்தைவிட குறைவாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:00 pm

PTI

புது தில்லி: நடப்பு ஆண்டில் இந்தியா முழுவதும் வழக்கத்தைவிட அதிகமான அளவு பருவமழை பெய்யும் என முன்னறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் வழக்கத்தைவிட குறைவாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் நடப்பு பயிர் ஆண்டுக்கான (ஜூலை- ஜூன்) வானிலை முன்னறிவிப்புகளை இன்று வெளியிட்டது.

தில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த அறிவிப்புகளை வெளியிட்டு இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் லஷ்மன் சிங் ரதோர் பேசியதாவது:

நீண்டகால சராசரி அளவின்படி இந்த ஆண்டு பருவமழை 106 சதவீதமாக இருக்கும். மேலும், பருவமழை நாடு முழுவதும் பரவலாக இருக்கும்.

அதே நேரத்தில் வடகிழக்கு இந்தியாவிலும், தென்கிழக்கு இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் வழக்கத்தைவிட குறைவான அளவே பருவமழை இருக்கும்.

வறட்சியின் பிடியில் இருக்கும் மகராஷ்டிரம் மாநிலத்தில் நிகழ் ஆண்டில் நல்ல மழைபெய்வதற்கான அறிகுறிகள் தெரிகின்றன என்றார்.

நீண்டகால சராசரி மழை அளவு 90 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் அந்த ஆண்டில் மழை அளவு குறைவாகவே இருக்கும். 90 முதல் 96 சதவீதம் வரை இருந்தால் வழக்கைத்தைவிட குறைவான அளவு இருக்கும் என்றும், 96-104 சதவீதம் வரை இருந்தால் வழக்கமான மழை அளவு இருக்கும் என்றும், 104-110 சதவீதம் வரை இருந்தால் வழக்கைத்தைவிட அதிகமான மழை இருக்கும் என்றும், 110 சதவீதக்குக்கும் மேல் இருந்தால் அதிக அளவு மழை பெய்யும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்திய உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம் 15 சதவீதம் அளவுக்கு பங்களிக்கிறது. மேலும், இந்திய மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் விவசாயத்தையே நம்பியுள்ளனர்.

கடந்த 2015-16 பயிர் ஆண்டில், பருவமழை குறைவாக இருந்ததால் 10 மாநிலங்கள் வறட்சி பாதிப்பு மாநிலங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகளுக்காக மத்திய அரசு ரூ. 10 ஆயிரம் கோடி வரை வறட்சி நிவாரணம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.