திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

அமீர் கானின் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை: தில்லி முதல்வர் கேஜரிவால்

சகிப்பின்மை குறித்த அமீர் கானின் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மையானவை என தில்லி முதல்வர் கேஜரிவால் கூறினார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:37 am

PTI

சகிப்பின்மை குறித்த அமீர் கான் பேசிய வார்த்தைகள் அனைத்தும் உண்மையானவை என தில்லி முதல்வர் கேஜரிவால் கூறினார்.

தில்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமீர் கான், இந்தியாவில் நிலவும் சகிப்பின்மையால், நாட்டை விட்டு வெளியேறி விடலாமா அவரது மனைவி கிரண் கேட்டுக் கொண்டதாக கூறினார்.

அமைதியின்மை அதிகரித்து வருவதாலும், குழந்தைகளின் பாதுகாப்பை கருதியும் கிரண் இவ்வாறு கூறியதாக அமீர் கான் பேசினார்.

அமீர் கானின் இந்த பேச்சு குறித்து டூவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஜேரிவால், அமீர் கானின் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மையானவை. இதுகுறித்து பேசியதற்காக நான் அவரை பாராட்டுகிறேன் என்றார்.

ஆளும் பாரதீய ஜனதா கட்சி, அமைதியாக இருப்பதை கைவிட்டு நாட்டில் அமைதியை ஏற்படுத்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார் கேஜரிவால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.