நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

காஷ்மீரில் வெடிகுண்டு தாக்குதல்: மூன்று பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட ஐவர் காயம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில், பிரிவினைவாதிகள் இன்று காலை நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் மூவரும், பொதுமக்கள் இருவரும் காயமடைந்தனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:35 am

IANS

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில், பிரிவினைவாதிகள் இன்று காலை நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் மூவரும், பொதுமக்கள் இருவரும் காயமடைந்தனர்.

ஸ்ரீநகரிலிருந்து சுமார் 14 கிமீ தூரத்தில் ஸ்ரீநகர்- ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் இத்தாக்குதல் நடைபெற்றது.

முக்கிய விருந்தினர்கள் செல்லும் பாதையை பராமரிக்கும் பணியை (Road Opening Party) மேற்கொண்டுள்ள மத்திய ரிசர்வ் போலீஸார் மீது, பிரிவினைவாதிகள் இந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர். இதில் 3 வீரர்களும், 2 பொதுமக்களும் காயமடைந்தனர்.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீஸார் தாக்குதல் நடைபெற்ற இடத்தை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன, போக்குவரத்தும் தடைபட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.