தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஷீனா போரா கொலை: இந்திராணி மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்

ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பாக இந்திராணி முகர்ஜி உள்ளிட்ட மூவர் மீது மும்பை நீதிமன்றத்தில் சி.பி.ஐ. இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

News image
Updated On :19 நவம்பர் 2015, 1:57 pm

ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பாக இந்திராணி முகர்ஜி உள்ளிட்ட மூவர் மீது மும்பை நீதிமன்றத்தில் சி.பி.ஐ. இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

ஷீனா போராவை கொலை செய்ததாக அவரது தாயார் இந்திராணி முகர்ஜி, முன்னாள் கணவர் சஞ்சய் கன்னா, டிரைவர் ஷியாம் ராய் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளனர்.

கார் டிரைவரான ஷியாம் ராயிடம் மும்பை போலீஸார் வேறு ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தியபோது, அவர் ஷீனா போராவை கொலை குறித்த தகவல்களை தெரிவித்தார்.

இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி இந்திராணி, அவரது முன்னாள் கணவர்  சஞ்சய் கன்னா ஆகியோரை கைது செய்தனர்.

மஹாராஷ்டிரா அரசு இந்த வழக்கை பின்னர் மத்திய புலனாய்வு துறைக்கு (சி.பி.ஐ.) மாற்றியது. எனினும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை மும்பை காவல் துறை ஆணையர் ராகேஷ் மரியா கண்காணித்து வந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான 1000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சி.பி.ஐ போலீஸார் மும்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில் இந்திராணி முகர்ஜி, சஞ்சய் கன்னா, ஷியாம் ராய் ஆகியோர் குற்றவாளிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது.

குற்றப்பத்திரிக்கையில் 150 பேரின் வாக்குமூலங்களும், 200 ஆவணங்களும் இணைக்கப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.