தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

நீதிபதிகள் நியமன விவகாரம்: அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் மோதல் முற்றுகிறது

நீதிபதிகள் நியமனம் தொடர்பாக நடைமுறைகள் குறித்த எவ்வித வரைவு அறிக்கையையும் மத்திய அரசு தயார் செய்யாது உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 நவம்பர் 2015, 10:50 am

நீதிபதிகள் நியமனம் தொடர்பாக நடைமுறைகள் குறித்த எவ்வித வரைவு அறிக்கையையும் மத்திய அரசு தயார் செய்யாது உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததோடு, ஏற்கெனவே உள்ள நீதிபதிகளே நீதிபதியை நியமிக்கும் 'கொலிஜியம்' முறையை தொடரும் என்றும் அறிவித்தது. மேலும், கொலிஜியம் முறையை மேம்படுத்துவதற்காக ஆலோசனைகளையும் வரவேற்றது.

இது தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, கொலிஜியம் முறையை மேம்படுத்துவதற்காக நீதிபதிகளை 'நியமிக்கும் நடைமுறைகள்' குறித்த வரைவை தயாரிக்குமாறு நேற்று மத்திய அரசை கேட்டுக் கொண்டது.

இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டானி ஜெனரல் முகுல் ரோஹத்கி, நீதிபதிகள் நியமனம் தொடர்பாக 'நியமிக்கும் நடைமுறைகள்' குறித்த எந்த வரைவையும்  அரசு தயாரிக்காது என்றார்.

மேலும், இம்முயற்சியை கைவிட்டு, கொலிஜியம் முறையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுக்க உச்ச நீதிமன்றம் முன்வரவேண்டும் என்றார். எங்கேயாவது ஒர் இடத்தில் இப்பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றார் அட்டானி ஜெனரல்.

முன்னதாக நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு மூன்று அடுக்கு வழிமுறைகளை முன்மொழிந்திருந்தது. நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட வேண்டும், நியமிக்கப்படும் நீதிபதிகள்  எந்த அரசியல் கட்சியிலாவது உறுப்பினராக இருந்தால் அதையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்டவை அடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.