ஆட்சி, அதிகாரம் உங்கள் கையில் இருக்கிறது. என் மீது தவறு இருந்தால், சிறையில் தள்ளுங்கள் என பிரதமர் மோடிக்கு சவால் விடுத்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 98-வது பிறந்த நாள் விழா இளைஞர் காங்கிரஸ் சார்பில் புதுதில்லியில் இன்று கொண்டாடப்பட்டது.
இவ்வாவிழாவில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, ஆளும் பாரதீய ஜனதா கட்சியும், ஆர்.எஸ்.எஸ். நிறுவனமும் என் மீதும், குடும்பத்தினர் மீதும் சகதியை அள்ளி வீசுகின்றனர்.
பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் எனது பாட்டி, தந்தை, தாய் ஆகியோர் மீது குற்றம்சாட்டி வருவதை எனது இளம் வயது முதலே கண்டு வருகிறேன்.
மோடி அவர்களே ஆட்சியும், அதிகாரமும் உங்கள் கையில் இருக்கிறது. என் மீதான குற்றசாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி, அதில் உண்மையில் இருந்தால் என்னை சிறையில் தள்ளுங்கள் என்று சவால் விடுத்தார் ராகுல்.
ராகுல் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என பாரதீய ஜனதா கட்சியின் சுப்பிரமணிய சுவாமி குற்றம்சாட்டியிருந்த நிலையில், ராகுல் காந்தி இவ்வாறு பேசினார்.
நீங்கள் தற்போது எதிர்கட்சியாக இல்லை, ஆளுங்கட்சியாக இருக்கிறீர்கள் எனவே, உங்களது எடுபிடிகள் எங்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளை தடுத்து நிறுத்துங்கள் என்று மோடியை வலியுறுத்தினார் ராகுல்.
நிறைய பேரை கொல்லுபவர்களை விட, ஒரு சிலரை குறிவைத்து கொலை செய்யும் அமைப்புகளே ஒட்டுமொத்த சமூகத்தின் பெயரை கெடுக்கின்றன. அதுதான் ஆர்.எஸ்.எஸ். அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை கொள்ள செய்வதே நமது கடமை என்றார் காங்கிரஸ் துணைத் தலைவர்.
பிகார் தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில், மோடி, அமித் ஷா ஆகியோர் பிரசாரம் செய்தனர். ஆனால், நமக்கு தான் அனைத்து இடங்களிலும் வெற்றி கிடைத்தது என்று குறிப்பிட்டார் ராகுல்.
ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களுக்கும் கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்களையும் இணைக்கும் பாலமாக செயல்படுவேன் என்றார் ராகுல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


