நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஹைதரபாத்: லிப்டில் சிக்கி முதல் வகுப்பு மாணவி பரிதாப பலி

ஹைதரபாத் நகரில் இன்று காலை நிகழ்ந்த சோக சம்பவத்தில் ஐந்து வயது மாணவி ஒருவர் லிப்டின் கதவுகளுக்கு இடையே சிக்கி பரிதாபமாக இறந்தார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:33 am

IANS

ஹைதரபாத் நகரில் இன்று காலை நிகழ்ந்த சோக சம்பவத்தில் ஐந்து வயது மாணவி ஒருவர் லிப்டின் கதவுகளுக்கு இடையே சிக்கி பரிதாபமாக இறந்தார்.

மலாக்பேட் பகுதியின் முஸ்ராம்பக் என்ற இடத்தில் உள்ள ஸ்டார் கிட்ஸ் பள்ளியில், இன்று காலை முதலாம் வகுப்பு மாணவி ரஹீனா ஃபாத்திமா (5), மூன்றாம் மாடியில் உள்ள தனது வகுப்பு செல்ல முயன்றார். அப்போது எதிர்பாரதவிதமாக லிப்டின் இரு கதவுகளுக்கு இடையே சிக்கி பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதையடுத்து பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தையின் பெற்றோரும் உறவினர்களும் பள்ளியில் குவிந்தனர். கவனக்குறைவாக இருந்த பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர்.

காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, போராட்டகாரர்களை சமாதானப்படுத்தினர். மேலும், சம்பவம் குறித்து பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகத்தினருடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.