மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

குளிர்கால கூட்டத்தொடர்: கூட்டணி கட்சிகளின் ஆதரவை திரட்ட அரசு முடிவு

குளிர்கால கூட்டத் தொடரில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோருவது என மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி தீர்மானித்துள்ளது.

News image
Updated On :17 நவம்பர் 2015, 12:33 pm

பிகார் தேர்தலுக்குப் பின் எதிர்கட்சிகள் அனைத்தும் ஒர் அணியில் திரண்டுள்ள நிலையில், குளிர்கால கூட்டத் தொடரில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோருவது என மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 26 ஆம் தேதி முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பிகார் தேர்தலுக்கு பின் நடைபெறும் இக்கூட்டத்தில், அரசுக்கு எதிராக பல்வேறு பிரச்சனைகளை எழுப்புவதற்கு எதிர்கட்சிகள் தயாராகி வருகின்றன.

சகிப்புதன்மை, விருதுகளை திரும்ப அளித்தல், தத்தாரி சம்பவம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பும் என தெரிகிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெIங்கைய நாயுடு, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்கவிருக்கிறார். நாடாளுமன்றத்தில் அரசு மேற்கொள்ளவிருக்கும் வழிமுறைகள் குறித்து அவர் விவாதிப்பார் என தெரிகிறது. மேலும், அவர் எதிர்க் கட்சி தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.

பிகார் தேர்தல் முடிவுகள் என்பது நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு எதிர்கட்சிகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் அல்ல என்றார் நாயுடு.

எதிர்கட்சிகளின் போராட்டத்தால், ஏறக்குறைய மழைக்காலக் கூட்டத்தொடர் முழுவதும் முடங்கியது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய ஜனதா தளம் பொதுச் செயலர் கே.சி. தியாகி, வெறுப்பு அரசியல் மேற்கொண்டு வரும் ஐந்து மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.