நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆந்திர கன மழை: சென்னை- விஜயவாடா சாலை துண்டிப்பு; 5 பேர் பலி

ஆந்திர மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் பெய்து வரும் கன மழைக்கு ஐந்து பேர் பலியாகியுள்ளனர். சென்னை- விஜயவாடா சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:33 am

IANS

வங்க கடலில் உருவான காற்றதழுத்த தாழ்வுநிலை வடமேற்கு நோக்கி நகர்ந்ததால், ஆந்திர மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த மழை வெள்ளத்தில் சிக்கி ஐந்து பேர் பலியாகியுள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கான ஏக்கரில் உள்ள பயிர்கள் நீரில் முழ்கியுள்ளன.

தமிழகத்தையொட்டியுள்ள சித்தூர், நெல்லூர், கடப்பா மாவட்டங்கள் இந்த மழையால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. பல கிராமங்கலை வெள்ள நீர் சூழ்ந்து போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இருவரை காணவில்லை. மேலும், 80 வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, 80 கால்நடைகளும் இறந்துள்ளன.

நெல்லூர் மாவட்டத்தில் உள்ள 40 கிராமங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு தனித் தீவாக காட்சி அளிக்கின்றன. மாவட்டத்தில் உள்ள சுமார் 100 குளங்கள் நிரம்பி வழிகின்றன. இதுவரை 5,000 பேர் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள சேதம் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தி வருகிறார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக 10,000 உணவு பொட்டங்கள் தயாராக உள்ளதாக, மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் பி. நாராயணன் கூறினார்.

மேலும், வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பதற்காக இந்திய விமானப் படையின் இரு ஹெலிகாப்டர்கள் சென்னையில் தயாராக இருக்கிறது என்ற அமைச்சர் மோசமான வானிலை காரணமாக மீட்பு பணியை மேற்கொள்ள இயலவில்லை என்றார்.

தேசிய பேரிடர் மீட்பு படையினரும் நெல்லூரில் முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பலத்த மழை காரணமாக சென்னை- விஜயவாடா சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. மும்பை- நெல்லூர், நாயுடுபேட்டா- சுல்லூர்பேட்டா சாலைகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரதிதல் சித்தூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் 20 செ.மீ. வரை மழை பதிவாகியுள்ளது. நெல்லூரில் மாவட்டத்தில் 30 செ.மீ மழை பெய்துள்ளது.

கிழக்கு மற்றும் மேற்கு கோதவரி மாவட்டங்களிலும் திங்கள்கிழமை இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.