வங்க கடலில் உருவான காற்றதழுத்த தாழ்வுநிலை வடமேற்கு நோக்கி நகர்ந்ததால், ஆந்திர மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த மழை வெள்ளத்தில் சிக்கி ஐந்து பேர் பலியாகியுள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கான ஏக்கரில் உள்ள பயிர்கள் நீரில் முழ்கியுள்ளன.
தமிழகத்தையொட்டியுள்ள சித்தூர், நெல்லூர், கடப்பா மாவட்டங்கள் இந்த மழையால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. பல கிராமங்கலை வெள்ள நீர் சூழ்ந்து போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இருவரை காணவில்லை. மேலும், 80 வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, 80 கால்நடைகளும் இறந்துள்ளன.
நெல்லூர் மாவட்டத்தில் உள்ள 40 கிராமங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு தனித் தீவாக காட்சி அளிக்கின்றன. மாவட்டத்தில் உள்ள சுமார் 100 குளங்கள் நிரம்பி வழிகின்றன. இதுவரை 5,000 பேர் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ள சேதம் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தி வருகிறார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக 10,000 உணவு பொட்டங்கள் தயாராக உள்ளதாக, மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் பி. நாராயணன் கூறினார்.
மேலும், வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பதற்காக இந்திய விமானப் படையின் இரு ஹெலிகாப்டர்கள் சென்னையில் தயாராக இருக்கிறது என்ற அமைச்சர் மோசமான வானிலை காரணமாக மீட்பு பணியை மேற்கொள்ள இயலவில்லை என்றார்.
தேசிய பேரிடர் மீட்பு படையினரும் நெல்லூரில் முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பலத்த மழை காரணமாக சென்னை- விஜயவாடா சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. மும்பை- நெல்லூர், நாயுடுபேட்டா- சுல்லூர்பேட்டா சாலைகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரதிதல் சித்தூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் 20 செ.மீ. வரை மழை பதிவாகியுள்ளது. நெல்லூரில் மாவட்டத்தில் 30 செ.மீ மழை பெய்துள்ளது.
கிழக்கு மற்றும் மேற்கு கோதவரி மாவட்டங்களிலும் திங்கள்கிழமை இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுக கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும்: ஓபிஎஸ்

பேருந்து சேவை இல்லாததால் பயணிகள் சாலை மறியல்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


