மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மேகி நூடூல்ஸ் தடை நீக்கம்: தர நிர்ணய ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு

மேகி நூடூல்ஸ் மீதான தடையை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது.

Updated On :16 நவம்பர் 2015, 3:14 pm

மேகி நூடூல்ஸ் மீதான தடையை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக காரீயம் இருந்ததால், நெஸ்லே நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மேகி நூடூல்ஸ்க்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த தடையை எதிர்த்து அந்நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன்பின்னர், அரசு அங்கீகரித்த ஆய்வகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில்,  மேகி நூடூல்ஸில் எவ்வித நச்சுப் பொருளும் இல்லை என தெரியவந்தது.

இதையடுத்து மேகி நூடூல்ஸ் மீதான தடையை மும்பை உயர்நீதிமன்றம் நீக்கியது.

இத்தடையை எதிர்த்து இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் இன்று உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதில் மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பில் பல தவறுகள் உள்ளன. மேலும், மேகி நிறுவனம் அரசு ஆய்வகங்களுக்கு அனுப்பிவைத்த மாதிரி மேகி நூடூல்ஸ்களில் நம்பகதன்மை இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.