ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தீவிரவாதத்துக்கு எதிராக உலக மக்கள் அனைவரும் இணைய வேண்டும்: மோடி

உலக மக்கள் அனைவரும் பயங்கரவாததுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

News image
Updated On :15 நவம்பர் 2015, 10:26 am

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் பலர் கொல்லப்பட்ட நிலையில், துருக்கி சென்றடைந்துள்ள இந்திய பிரதமர் மோடி, உலக மக்கள் அனைவரும் பயங்கரவாததுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி-20 கூட்டமைப்பு கூட்டம், துருக்கியில் உள்ள அண்டாலியா நகரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

லண்டன் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, ஜி-20 கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார்.

அங்கு பேசிய மோடி, உலக மக்கள் அனைவரும் இணைந்து ஒரு குழுவாக இணைந்து பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனிடையே, பாரீஸ் தாக்குதலையடுத்து, பிரிக்ஸ் மாநாடு நடைபெறும் அண்டாலா நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

சுமார் 13,000 அதிகாரிகளும், 3,000 பத்திரிக்கையாளர்களும் பங்கேற்க இருக்கும் இக்கூட்டத்துக்கான பாதுபாப்பு பணியில் 12,000 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுமார் 350 ஆளில்லா குட்டி விமானங்கள் (Drone) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.