நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மும்பை குடியிருப்பில் கப்பற்படை அதிகாரியின் மனைவி படுகொலை

மும்பையின் புறநகரான தாதர் பகுதியின் குடியிருப்பு ஒன்றில், இந்திய கப்பற்படை அதிகாரியின் மனைவி தலையில் பயங்கர காயத்துடன் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:28 am

PTI

மும்பையின் புறநகரான தாதர் பகுதியின் குடியிருப்பு ஒன்றில், இந்திய கப்பற்படை அதிகாரியின் மனைவி தலையில் பயங்கர காயத்துடன் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவாஜி பூங்கா அருகே லுயிஸ் கோர்ட் குடியிருப்பில் வசித்து வந்த 57 வயதாகும் பெலஸா கார்டோஸோ ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்த அவரது வீட்டு வேலைக்காரப் பெண், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியோடு, அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

உயிரிழந்த பெலஸாவின் கணவர் தற்போது நடுக்கடலில் கப்பலில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெலஸாவின் வீட்டில் தச்சு வேலை செய்ய வந்த நபர்தான் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தலைமறைவாக இருக்கும் அந்த நபரை தேடி வருகிறார். கொலைக்கான பின்னணி தெரியவரவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.