நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

எலக்ட்ரீஷியன், பிளம்பர் ஆகும் கான்பூர் சிறைக் கைதிகள்

கான்பூரில் உள்ள மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு எலக்ட்ரிகல் மற்றும் பிளம்பிங் தொழிற் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. அதே போல, பெண் கைதிகளுக்கு அழகுக் கலை, மருதாணி வைப்பது போன்ற கைத்தொழில்கள் பயிற்றுவிக்கப்பட உள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:28 am

PTI

கான்பூரில் உள்ள மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு எலக்ட்ரிகல் மற்றும் பிளம்பிங் தொழிற் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. அதே போல, பெண் கைதிகளுக்கு அழகுக் கலை, மருதாணி வைப்பது போன்ற கைத்தொழில்கள் பயிற்றுவிக்கப்பட உள்ளது.

சிறைத் துறை கண்காணிப்பாளர் விஜய் விக்ரம் சிங் இது குறித்து கூறுகையில், 160 சிறைக் கைதிகள் பயிற்சி பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயிற்சி முடிந்து சிறையில் இருந்து வெளியேறும் போது, இந்த கைத்தொழில்களைக் கொண்டு இவர்கள் வாழ்வார்கள். மீண்டும் அதே குற்றத்தொழில்களில் ஈடுபட மாட்டார்கள் என்பதால் இந்த பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.

இந்த பயிற்சிகள் அனைத்தும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பணியாற்றும் பயிற்றுநர்களைக் கொண்டு வழங்கப்படுவதாகவும், விரைவில், இங்கு மோட்டார் மெக்கானிக், மொபைல் ரிப்பேர், இன்வெர்டர் ரிப்பேர், மோட்டார் வைன்டிங் போன்ற பயிற்சிகளும் துவங்க உள்ளன என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.