நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பலாத்காரத்தால் பிறந்த குழந்தைக்கு தந்தையின் பரம்பறை சொத்தில் பங்கு உண்டு: நீதிமன்றம்

பலாத்காரத்தில் பிறந்த குழந்தைக்கு, தந்தையின் பரம்பறை சொத்தில் பங்கு பெற முழு உரிமை உள்ளது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை அளித்துள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:27 am

PTI

பலாத்காரத்தில் பிறந்த குழந்தைக்கு, தந்தையின் பரம்பரை சொத்தில் பங்கு பெற முழு உரிமை உள்ளது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை அளித்துள்ளது.

நீதிபதிகள் ஷாபியுல் ஹஸ்நென், டி.கே. உபாத்யாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று அளித்த தீர்ப்பில், பலாத்காரத்தில் பிறந்த குழந்தையை முறைகேடான முறையில் பிறந்த குழந்தையாகக் கருதி, அதற்கும், பரம்பரை சொத்தில் உரிய பங்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அதே சமயம், பலாத்காரத்தில் பிறந்த குழந்தை யாருக்கேனும் தத்து கொடுக்கப்பட்டிருந்தால், அதன் உண்மையான தந்தையின் பரம்பரை சொத்தில் இருந்து பங்கு பெற இயலாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.