தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

'நெட் நியூட்ராலிட்டி' குறித்த கருத்துகள்: ஜன. 7 வரை நீட்டிப்பு

டிராய் நிறுவனம் 'சமநிலை இணைய சேவை' (நெட் நியூட்ராலிட்டி) குறித்த கருத்துகளை தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை ஜனவரி 7 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

News image
Updated On :30 டிசம்பர் 2015, 12:54 pm

தொலைதொடர்பு நிறுவனங்களை ஒழுங்குப்படுத்தும் டிராய் நிறுவனம் 'சமநிலை இணைய சேவை' (நெட் நியூட்ராலிட்டி) குறித்த கருத்துகளை தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை ஜனவரி 7 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

தொலைபேசி சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா கூறினார்.

முன்னதாக, 'சமநிலை இணைய சேவை' (நெட் நியூட்ராலிட்டி) குறித்த கருத்துகளை டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என டிராய் அறிவித்திருந்தது.

தற்போது அந்த கால அவகாசம் ஜனவரி 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொலைதொடர்பு சேவையை பயன்படுத்துவோர் தங்களது கருத்துகளை அனுப்பிவைக்க வேண்டும்.

'சமநிலை இணைய சேவை' குறித்து இதுவரை 16.5 லட்சம் பேர் தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர். டிராய் அறிவித்த திட்டங்களிலேயே இதற்குதான் அதிகம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக், ப்ரீபேசிஸ் மூலம் சுமார் 8 லட்சம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், இதே அளவிலான மக்களும் ஃபேஸ்புக் நிறுவனம் வழங்கும் ப்ரீபேசிஸ் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஏர்டெல் நிறுவனம், ஏர்டெல் ஜீரோ என்ற பெயரில் ஒரு திட்டத்தை அறிவித்த பிறகே, சமநிலை இணைய சேவை குறித்த விவாதம் எழுந்தது.

அது என்ன 'சமநிலை இணைய சேவை' (நெட் நியூட்ராலிட்டி)

இணையத்தைப் பயன்படுத்தும் நபர் எதை வேண்டுமானாலும் பார்க்க, எந்த இணைய சேவை நிறுவனத்தின் தகவல் களஞ்சியத்துக்குள்ளும் நுழைந்து பார்க்க, எந்தவோர் இணைய வணிக நிறுவனத்துடனும் இ-வர்த்தகம் செய்யத் தடையில்லாத நிலைமைதான் சமநிலை இணைய சேவை என்பது.

யூ டியூப்பில் படம் பார்க்கலாம், பதிவேற்றம் செய்யலாம், ஃபேஸ்புக், லிங்க்டுஇன் கணக்கு தொடங்கலாம், கூகுள், யாகூ எதில் வேண்டுமானாலும் எதையும் தேடலாம். ஃபிலிப்கார்ட், அமேசான் என எந்தவோர் இணைய வணிகர்களிடமும் பொருள் வாங்கலாம், ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்யலாம். மின் கட்டணம் செலுத்தலாம், வங்கி சேவையை பெறலாம்.

இவை அனைத்துக்கும் தேவை நீங்கள் இணையத்துக்கான இணைப்பு (நிரந்தரமாக அல்லது தாற்காலிகமாக) பெற்றிருக்க வேண்டும். அவ்வளவுதான்.

ஆனால், சேவைகளைக் கட்டுப்படுத்துதல், சேவைகளுக்குக் கட்டணம் விதித்தல், சேவைகளைத் தரவரிசைப்படுத்துதல், சில சேவைகளுக்கு அதிவேகம் நிர்ணயித்தல் ஆகிய உரிமைகளை தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கோருகின்றன.

இது இணைய சமநிலையைப் பாதிக்கும் என இணையத்தை காப்போம் என்ற கூட்டமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.