தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

எலி, நாயால் தாமதமான ஏர் இந்தியா விமானங்கள்

எலி மற்றும் நாய் தொல்லை காரணமாக இன்று இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு புறப்பட்ட இரு ஏர் இந்தியா விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டு சென்றன.

News image
Updated On :30 டிசம்பர் 2015, 3:37 pm

எலி மற்றும் நாய் தொல்லை காரணமாக இன்று இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு புறப்பட்ட இரு ஏர் இந்தியா விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டு சென்றன.

சம்பவம் 1

இது நடைபெற்றது மும்பை சர்வதேச விமான நிலையத்தில்..

ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான டிரிம்லைனர் விமானம் 240 பயணிகளுடன் இன்று காலை 7 மணிக்கு மும்பையிலிருந்து லண்டன் புறப்பட்டது.

விமானம் டெகரான் வான்பகுதியில் பறந்தபோது, விமானத்தின் உணவு விடுதியில் சுற்றி திரிந்த எலி ஒன்றை ஊழியர் ஒருவர் தற்செயலாக கவனித்தார்.

சிவில் விமானப் போக்குவரத்து துறை வகுத்துள்ள விதிமுறையின்படி, விமானி மும்பை விமான நிலையத்தை தொடர்பு கொண்டார். பின்னர் அந்த விமானம் பயணத்தை பாதியிலே ரத்து செய்துவிட்டு, மும்பை திரும்பியது. பிற்பகல் சுமார் 12.25 மணியளவில் மும்பை விமானம் வந்தடைந்தது.

பின்னர் விமானம் தொலைவான நிறுத்துமிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பூச்சிகள், சிறு விலங்குகளை நீக்கும் வகையிலான வாயு சோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

இச்சம்பவம் குறித்து பேசிய ஏர் இந்தியா நிறுவன செய்தி தொடர்பாளர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் திருப்பி அழைக்கப்பட்டது. விமானப் பயணிகள் வேறு விமானத்தில் லண்டன் அனுப்பிவைக்கப்பட்டனர் என்றார்.

சம்பவம் 2

இது நடைபெற்றது அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்தில்..

இன்று பிற்பகல் 3.10 மணிக்கு 171 பயணிகளுடன் ஏர் இந்தியா இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபைக்கு புறப்பட்டது.

விமானம் ஓடுதளத்திலிருந்து பறப்பதற்கு தயாரான போது, விமானத்தின் முன்சக்கரம் முன்பு திடீரென்று ஒரு நாய் ஓடிவந்தது.

செய்வது அறியாத திகைத்த விமான, 'அவசர பிரேக்'கை  அழுத்தி விமானத்தை நிறுத்தினார். பின்னர் விமானத்தை மீண்டும் இருப்பிடத்துக்கே கொண்டு வந்துவிட்டார்.

இச்சம்பவத்தில் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

இருப்பிடத்துக்கு வந்த பின்னர் பயணிகள் அனைவரும் இறக்கவிடப்பட்டு, விமானம் முழுவதும் பரிசோதனை செய்யப்பட்டப் பிறகு இரவு 7.13 மணிக்கு மீண்டும் துபை புறப்பட்டு சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.