தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்ஃபார்ம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

எலி, நாயால் தாமதமான ஏர் இந்தியா விமானங்கள்

எலி மற்றும் நாய் தொல்லை காரணமாக இன்று இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு புறப்பட்ட இரு ஏர் இந்தியா விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டு சென்றன.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:56 am

PTI

எலி மற்றும் நாய் தொல்லை காரணமாக இன்று இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு புறப்பட்ட இரு ஏர் இந்தியா விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டு சென்றன.

சம்பவம் 1

இது நடைபெற்றது மும்பை சர்வதேச விமான நிலையத்தில்..

ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான டிரிம்லைனர் விமானம் 240 பயணிகளுடன் இன்று காலை 7 மணிக்கு மும்பையிலிருந்து லண்டன் புறப்பட்டது.

விமானம் டெகரான் வான்பகுதியில் பறந்தபோது, விமானத்தின் உணவு விடுதியில் சுற்றி திரிந்த எலி ஒன்றை ஊழியர் ஒருவர் தற்செயலாக கவனித்தார்.

சிவில் விமானப் போக்குவரத்து துறை வகுத்துள்ள விதிமுறையின்படி, விமானி மும்பை விமான நிலையத்தை தொடர்பு கொண்டார். பின்னர் அந்த விமானம் பயணத்தை பாதியிலே ரத்து செய்துவிட்டு, மும்பை திரும்பியது. பிற்பகல் சுமார் 12.25 மணியளவில் மும்பை விமானம் வந்தடைந்தது.

பின்னர் விமானம் தொலைவான நிறுத்துமிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பூச்சிகள், சிறு விலங்குகளை நீக்கும் வகையிலான வாயு சோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

இச்சம்பவம் குறித்து பேசிய ஏர் இந்தியா நிறுவன செய்தி தொடர்பாளர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் திருப்பி அழைக்கப்பட்டது. விமானப் பயணிகள் வேறு விமானத்தில் லண்டன் அனுப்பிவைக்கப்பட்டனர் என்றார்.

சம்பவம் 2

இது நடைபெற்றது அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்தில்..

இன்று பிற்பகல் 3.10 மணிக்கு 171 பயணிகளுடன் ஏர் இந்தியா இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபைக்கு புறப்பட்டது.

விமானம் ஓடுதளத்திலிருந்து பறப்பதற்கு தயாரான போது, விமானத்தின் முன்சக்கரம் முன்பு திடீரென்று ஒரு நாய் ஓடிவந்தது.

செய்வது அறியாத திகைத்த விமான, 'அவசர பிரேக்'கை  அழுத்தி விமானத்தை நிறுத்தினார். பின்னர் விமானத்தை மீண்டும் இருப்பிடத்துக்கே கொண்டு வந்துவிட்டார்.

இச்சம்பவத்தில் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

இருப்பிடத்துக்கு வந்த பின்னர் பயணிகள் அனைவரும் இறக்கவிடப்பட்டு, விமானம் முழுவதும் பரிசோதனை செய்யப்பட்டப் பிறகு இரவு 7.13 மணிக்கு மீண்டும் துபை புறப்பட்டு சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.