எலி மற்றும் நாய் தொல்லை காரணமாக இன்று இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு புறப்பட்ட இரு ஏர் இந்தியா விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டு சென்றன.
சம்பவம் 1
இது நடைபெற்றது மும்பை சர்வதேச விமான நிலையத்தில்..
ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான டிரிம்லைனர் விமானம் 240 பயணிகளுடன் இன்று காலை 7 மணிக்கு மும்பையிலிருந்து லண்டன் புறப்பட்டது.
விமானம் டெகரான் வான்பகுதியில் பறந்தபோது, விமானத்தின் உணவு விடுதியில் சுற்றி திரிந்த எலி ஒன்றை ஊழியர் ஒருவர் தற்செயலாக கவனித்தார்.
சிவில் விமானப் போக்குவரத்து துறை வகுத்துள்ள விதிமுறையின்படி, விமானி மும்பை விமான நிலையத்தை தொடர்பு கொண்டார். பின்னர் அந்த விமானம் பயணத்தை பாதியிலே ரத்து செய்துவிட்டு, மும்பை திரும்பியது. பிற்பகல் சுமார் 12.25 மணியளவில் மும்பை விமானம் வந்தடைந்தது.
பின்னர் விமானம் தொலைவான நிறுத்துமிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பூச்சிகள், சிறு விலங்குகளை நீக்கும் வகையிலான வாயு சோதனைக்கு உள்படுத்தப்பட்டது.
இச்சம்பவம் குறித்து பேசிய ஏர் இந்தியா நிறுவன செய்தி தொடர்பாளர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் திருப்பி அழைக்கப்பட்டது. விமானப் பயணிகள் வேறு விமானத்தில் லண்டன் அனுப்பிவைக்கப்பட்டனர் என்றார்.
சம்பவம் 2
இது நடைபெற்றது அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்தில்..
இன்று பிற்பகல் 3.10 மணிக்கு 171 பயணிகளுடன் ஏர் இந்தியா இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபைக்கு புறப்பட்டது.
விமானம் ஓடுதளத்திலிருந்து பறப்பதற்கு தயாரான போது, விமானத்தின் முன்சக்கரம் முன்பு திடீரென்று ஒரு நாய் ஓடிவந்தது.
செய்வது அறியாத திகைத்த விமான, 'அவசர பிரேக்'கை அழுத்தி விமானத்தை நிறுத்தினார். பின்னர் விமானத்தை மீண்டும் இருப்பிடத்துக்கே கொண்டு வந்துவிட்டார்.
இச்சம்பவத்தில் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
இருப்பிடத்துக்கு வந்த பின்னர் பயணிகள் அனைவரும் இறக்கவிடப்பட்டு, விமானம் முழுவதும் பரிசோதனை செய்யப்பட்டப் பிறகு இரவு 7.13 மணிக்கு மீண்டும் துபை புறப்பட்டு சென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

வார பலன்கள் (ஏப். 24 - 30) - ரிஷபம்

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மேஷம்

என்ன, கரூர் சென்று செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லையா? ஏன்??
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


