தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்ஃபார்ம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

இந்தியா: ஊடகவியலாளர்களுக்கு ஆசியாவிலேயே பாதுகாப்பற்ற நாடு

ஆசிய நாடுகளிலேயே, ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இந்தியா உள்ளது என, பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு குறித்த கண்காணிப்பகம் கூறியுள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:55 am

PTI

ஆசிய நாடுகளிலேயே, ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இந்தியா உள்ளது என, பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு குறித்த கண்காணிப்பகம் கூறியுள்ளது.

எல்லைகள் கடந்த செய்தியாளர்கள் (Reporters without borders) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் விவரம்:

நிகழாண்டில் மட்டும் இந்தியாவில் 9 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளை விட அதிகம்.

ஐந்து பத்திரிகையாளர்கள் தங்களது பணியின் போதே கொலை செய்யப்பட்டுள்ளனர். மற்ற நான்கு பேரும் எதற்காக கொலை செய்யப்பட்டார்கள் என்றே தெரியவில்லை.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனைகள் போதுமானதாக இல்லை. இந்திய பத்திரிக்கையாளர்களை பாதுகாப்பதற்கு தேவையான தேசிய அளவிலான திட்டத்தை அரசாங்கம் வகுக்க வேண்டும்.

நிகழ் ஆண்டில் உலகம் முழுவதும் 67 செய்தியாளர்கள் பணியின்போது கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், 43 பேர் காரணம் ஏதும் தெரியாமல் கொலை செய்யப்பட்டுள்ளனர்.  இதுதவிர 27 தொழில் முறை அல்லாத செய்தியாளர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

செய்தியாளர்கள் பாதுகாப்புக்காக ஒரு சிறப்பு பிரதிநிதி ஐக்கிய நாடுகள் சபை சார்பில் விரைவில் நியமிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு பலியான செய்தியாளர்களில் 40 % பேர் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளான அல்-கய்தா மற்றும் இஸ்லாமிய தேசம் ஆகியவற்றால் கொலை செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.