ஆசிய நாடுகளிலேயே, ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இந்தியா உள்ளது என, பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு குறித்த கண்காணிப்பகம் கூறியுள்ளது.
எல்லைகள் கடந்த செய்தியாளர்கள் (Reporters without borders) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் விவரம்:
நிகழாண்டில் மட்டும் இந்தியாவில் 9 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளை விட அதிகம்.
ஐந்து பத்திரிகையாளர்கள் தங்களது பணியின் போதே கொலை செய்யப்பட்டுள்ளனர். மற்ற நான்கு பேரும் எதற்காக கொலை செய்யப்பட்டார்கள் என்றே தெரியவில்லை.
ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனைகள் போதுமானதாக இல்லை. இந்திய பத்திரிக்கையாளர்களை பாதுகாப்பதற்கு தேவையான தேசிய அளவிலான திட்டத்தை அரசாங்கம் வகுக்க வேண்டும்.
நிகழ் ஆண்டில் உலகம் முழுவதும் 67 செய்தியாளர்கள் பணியின்போது கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், 43 பேர் காரணம் ஏதும் தெரியாமல் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர 27 தொழில் முறை அல்லாத செய்தியாளர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
செய்தியாளர்கள் பாதுகாப்புக்காக ஒரு சிறப்பு பிரதிநிதி ஐக்கிய நாடுகள் சபை சார்பில் விரைவில் நியமிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு பலியான செய்தியாளர்களில் 40 % பேர் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளான அல்-கய்தா மற்றும் இஸ்லாமிய தேசம் ஆகியவற்றால் கொலை செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

வார பலன்கள் (ஏப். 24 - 30) - ரிஷபம்

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மேஷம்

என்ன, கரூர் சென்று செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லையா? ஏன்??
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


