சரக்கு-சேவை வரி மசோதா நிறைவேறாமல் தடுத்து வருவதன் மூலம் காங்கிரஸ் கட்சி பொருளாதார சீர்திருத்தங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி குற்றம்சாட்டினார்.
தில்லியில் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி:
உலக நாடுகளுக்கு இணையாக நேரடி வரி விதிப்பில் மாற்றங்களை கொண்டுவருவதற்கு அரசு விரும்புகிறது. ஆனால், சரக்கு-சேவை வரி மசோதாவை நிறைவேற்றாமல் தடுப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சி பொருளாதார சீர்திருத்தங்களுக்கு தடை ஏற்படுத்தி வருகிறது.
காங்கிரஸ் போன்ற தேசிய கட்சி இதுபோன்ற தடைகளை ஏற்படுத்துவதன் மூலம் ஒருவித வக்கிர இன்பத்தை அடைகிறது. இது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியையும் பாதிக்கிறது.
முடக்கம் என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இது ஒரு தவறான முன்னுதாரணமாகும். இதை மாநில பேரவைகளிலோ, வரும் கால எதிர்கட்சிகளோ தொடருமாமானல், மோசமான உதாரணமாகிவிடும்.
காங்கிரஸ் கட்சி தனது நிலையை மாற்றிக் கொள்ளாவிட்டால், நாடாளுமன்றம் இதுபோன்ற மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு தேவையான வேறு வழிகளை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அதற்காக அமளிக்கு இடையே நிறைவேற்ற வேண்டும் என்பதில்லை.
இந்திய அரசியல் அமைப்பில் மாநிலங்களவை என்பது முக்கியமானது. அது இந்திய அடிப்படை கட்டமைப்பின் ஓர் அங்கமாகும். ஆனால், நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சபை மீது மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சபை தொடர்ந்து அதிகாரம் செலுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
மாநிலங்களவை என்பது மக்களவையின் நடவடிக்கைகளை சரிப்பார்த்து சமப்படுத்துவதற்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். மக்களவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு மாநிலங்களவை எதிர்ப்பு தெரிவிக்குமானால், கூட்டு கூட்டம் நடத்தி நிறைவேற்றலாம். ஆனால், அது அடிக்கடி நடைபெறக்கூடாது என்றார் ஜேட்லி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா? பாஜக கோரிக்கையும் காங்கிரஸ் கிண்டலும்!
கதாநாயகனாகும் சாய் அபயங்கர்?

சிஎஸ்கேவின் வரலாற்று வெற்றியை முகேஷ் சௌதரிக்குச் சமர்ப்பித்த கேப்டன் ருதுராஜ்!

மூன்றாவது நாளாகக் குறைந்த தங்கம் விலை: வெள்ளி?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


