தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகள் மீண்டும் இணையும்: ராம் மகாதேவ்

நல்லெண்ணத்தின் அடிப்படையில், பிரிந்திருக்கும் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகள் மீண்டும் இணையும் என

News image
Updated On :26 டிசம்பர் 2015, 12:49 pm

நல்லெண்ணத்தின் அடிப்படையில், பிரிந்திருக்கும் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகள் மீண்டும் இணையும் என பாரதீய ஜனதா கட்சியின் பொதுச் செயலர் ராம் மகாதேவ் கூறினார்.

இதுதொடர்பாக அவர் ஹோகாவில் உள்ள அல் ஜஹீரா தொலைகாட்சிக்கு அளித்த நேர்காணல் விவரம்:

கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகள் மீண்டும் ஒன்றிணைந்து அகன்ற பாரதம் உருவாகும் என ஆர்.எஸ்.எஸ். இன்றளவும் நம்புகிறது. ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் என்ற அடிப்படையில் நானும் அதை நம்புகிறேன்.

எனினும், இந்த இணைப்பு எவ்வித போர் மூலமும் நிறைவேறாது. நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்த நாடுகள் இணையும்.

இந்திய நாட்டில் ஒரு குறிப்பிட்ட கலாச்சாரம் பின்பற்றப்படுகிறது. இதை இந்து கலாச்சாரம் என்று அழைக்கிறோம். இந்தியா என்பது ஒரே தேசம், ஒரே மக்கள், ஒரே கலாச்சாரம்.

இந்தியாவில், விருதுகளை ஒரு சிலரே திருப்பி தரும் நிலையில், பெரும்பாலானவர்கள் திருப்பி தரவில்லை. அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே அவை திருப்பி அளிக்கப்படுகின்றன. ஆனால், அது தேசத்தை உலக அரங்கில் அவமதிக்கிறது என்றார்.

பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமரை திடீரென்று சென்று சந்திப்பதற்கு முன்றே இந்த நேர்காணல் நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டது. அது நேற்று இரவு ஒளிபரப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.