நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய கூட்டத்தொடரின் போது கூச்சல் குழப்பத்தால் மாநிலங்களவையின் 47 மணி நேரம் வீணானது.
கூட்டத்தொடரின் இறுதி நாளன்று பேசிய மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான ஹமித் அன்சாரி, மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்களின் செயல்பாடுகள் குறித்து சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.
கூட்டத்தொடரின் போது, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம் மற்றும் பணி நிபந்தனைகள் தொடர்பான மசோதா, தேசிய நீர்வழித் தடங்கள் மசோதா உள்ளிட்ட 13 மசோதாக்கள் மக்களவையிலும், வணிகம் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்களை ஏற்படுத்துவது தொடர்பான மசோதா, போனஸ் திருத்தச் சட்ட மசோதா, சிறார் நீதி சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட 7 மசோதாக்கள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டன.
எனினும், ஆளும் பாஜக அரசு மிகவும் முக்கியமாகக் கருதிய சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா, இந்தக் கூட்டத்தொடரிலும் நிறைவேற்றப்படவில்லை.
கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில், லலித் மோடி விவகாரம், வியாபம் முறைகேடு ஆகிய விவகாரங்களை எழுப்பி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அந்தக் கூட்டத்தொடர் முழுவதும் நாடாளுமன்ற அலுவல்கள் முற்றிலும் முடங்கின.
"நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை வழக்கு விவகாரம், தில்லி கிரிக்கெட் சங்க விவகாரம் ஆகியவற்றை முன்னிறுத்தி காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், இந்தக் கூட்டத்தொடரிலும் நாடாளுமன்ற அலுவல்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, மாநிலங்களவையில் மொத்தம் 47 மணிநேரம் அலுவல்கள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று மக்களையில் பேசிய, அதன் தலைவர் சுமித்ரா மகாஜன், "மலரவிருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நம் அனைவருக்கும் புதிய நம்பிக்கையும், புதிய ஆற்றலையும் அளிக்கும் என்று நம்புகிறேன். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அனைத்து வழிமுறைகளையும் நாம் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதன் மூலம், நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து கருத்தொற்றுமை ஏற்படுத்தலாம். நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், இயன்றவரை அதனை ஆக்கப்பூர்வமாக நடத்த முயல்வோம்' எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


