/

மகாராஷ்டிராவில் மிலாது நபி அன்று மதுபானக் கடைகள்: எதிர்க்கட்சிகள் சாடல்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு மகாராஷ்டிராவில் மிலாது நபி அன்றும் இரவு நேரத்தில் மதுபானக் கடைகள் திறந்து வைக்க மாநில அரசு அளித்துள்ள அனுமதிக்கு எதிர்க்கட்சிகள் கடுமையானக் கண்டனத்தை தெரிவித்துள்ளன.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:52 am

PTI

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு மகாராஷ்டிராவில் மிலாது நபி அன்றும் இரவு நேரத்தில் மதுபானக் கடைகள் திறந்து வைக்க மாநில அரசு அளித்துள்ள அனுமதிக்கு எதிர்க்கட்சிகள் கடுமையானக் கண்டனத்தை தெரிவித்துள்ளன.

இது குறித்து மகாராஷ்டிர அரசு வெளியிட்ட அறிக்கையில், டிசம்பர் 24, 25, டிசம்பர் 31ம் தேதிகளில் மதுபானக் கடைகளை திறந்து வைப்பதில் சில தளர்வுகள் அறிவிக்கப்படுவதாகக் கூறியுள்ளது.

இந்த அறிவிப்புக்குக் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், முஸ்லிம் மக்களின் மத உணர்வுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். ஆனால், அவர்கள் இரண்டாம் தர குடிமக்கள் போல நடத்தப்படுகிறார்கள் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சச்சின் சவந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.