/

பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க பாஜக எம்.பி. வலியுறுத்தல்

பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என மக்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது பாரதீய ஜனத கட்சி உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:51 am

PTI

பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என மக்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது பாரதீய ஜனத கட்சி உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.

மக்களவையில் நேரமில்லா நேரத்தின்போது, இக்கோரிக்கையை வலியுறுத்திய பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத், 'ஜிகாதி பயங்கரவாதத்தால் உலக நாடுகள் அஞ்சிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பகவத் கீதையின் போதனைகள் நம் அனைவருக்கும் ஏற்றதாக உள்ளது. கீதையை பள்ளிப் பாடத்திலும் சேர்க்க வேண்டும்' என்றார்.

மேலும், குருஷேத்ராவில் அண்மையில் நடைபெற்ற பகவத் கீதா மகா உத்சவ் நிகழ்ச்சியை புகழ்ந்த அவர் கீதை சமூக இணக்கத்தை கற்பிக்கிறது என்றார்.

யோகி ஆதியநாத்தின் கோரிக்கைக்கு மேஜைகளில் ஒலியெழுப்பி பாஜக எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.