அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இரு பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு செல்லவிருந்த 19 மாணவர்களை ஏர் இந்தியா நிறுவனம் தடுத்து நிறுத்தியுள்ளது.
சான் பிரான்சிஸ்கோ நகரில் செயல்படும் அந்த இரு பல்கலைக்கழகங்களும் அமெரிக்கா அரசால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு இதேபோல், அப்பல்கலைக்கழகங்களில் சேருவதற்காக சென்ற இந்திய மாணவர்கள் சிலர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதுபோன்ற சங்கடமான நிலையை தவிர்க்கும் நோக்கிலேயே இன்று 19 மாணவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
பயணத்துக்காக மாணவர்கள் செலுத்திய முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படும் என ஏர் இந்தியா உறுதியளித்துள்ளது.
இதுதொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை:
அமெரிக்காவின் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை கடந்த 19 ஆம் தேதி ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தது. அதில் சான் பிரான்சிஸ்கோ நகரில் செயல்படும் பல்கலைக்கழகத்தில் சேருவதற்காக வரும் மாணவர்கள் தடுத்து நிறுத்தப்படுவதோடு, திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி 14 மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அமெரிக்கா சென்றபிறகு, திருப்பி அனுப்பப்படுவதால் மாணவர்கள் திரும்பி வருவதற்கான பணத்தை சேர்ப்பதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர். மேலும், விமானங்களிலும் உடனடியாக இருக்கைவசதி கிடைப்பதில்லை.
இந்நிகழ்வுகளை கருத்தில் கொண்டே தற்போது 19 மாணவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள ஏர் இந்தியா கிளை அனுமதி அளிக்கும்பட்சத்தில் இந்த மாணவர்களுக்கு எவ்வித கூடுதல் கட்டணமுமின்றி உடனடியாக இருக்கை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று, சில ஊடகங்களில் வெளிவந்த தவறான தகவல்களாலே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
'மாணவர் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் குறித்த தகவல்கள் ஏதும் தற்போதைக்கு தங்களிடம் இல்லை. இதுகுறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம். எங்களுக்கு கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக பகிர்ந்து கொள்கிறோம்' என இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதக அலுவலகம் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


