தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தில்லி கிரிக்கெட் சங்க முறைகேடு: பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கீர்த்தி ஆசாத்

தில்லி கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கீர்த்தி ஆசாத் கூறியுள்ளார்.

News image
Updated On :17 டிசம்பர் 2015, 2:54 pm

தில்லி கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கீர்த்தி ஆசாத் கூறியுள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, தில்லி கிரிக்கெட் சங்க தலைவாரக இருந்த காலத்தில் நிதி முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, அவர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் இச்சம்பவத்தில் ஆரம்பம் முதலே முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதீய ஜனதா எம்.பி. கீர்த்தி ஆசாத் வலியுறுத்தி வருகிறார்.

நிதி அமைச்சருக்கு எதிராக கட்சி எம்.பி. போர்கொடி உயர்த்தி வருவது பாஜகவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாஜக பொதுச் செயலாளர் ராம்லால் இன்று காலை கீர்த்தி ஆசாத்தை சந்தித்து பேசினார். அருண் ஜேட்லி விவகாரத்தில், கீர்த்தி ஆசாத் அமைதியாக இருக்குமாறு கட்சி வலியுறுத்தியதாக தெரிகிறது.

இந்நிலையில் அதை மறுத்து டுவிட் செய்துள்ள கீர்த்தி ஆசாத், கட்சி என்னை அமைதிப்படுத்த முயற்சிப்பதாக கூறுவது வெறும் புரளியே. தில்லி கிரிக்கெட் சங்க முறைகேடுகள் குறித்த என்னுடைய போராட்டம் தொடரும் என்றார்.

பின்னர் இவ்விவகாரம் குறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும் கீர்த்தி ஆசாத் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.