/

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதி கைது

ஒடிசா மாநிலம் கட்டா அருகே, தீவிரவாத அமைப்பான அல்-கொய்தாவுன் தொடர்பு வைந்திருந்ததாக தீவிரவாதி ஒருவரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:49 am

PTI

ஒடிசா மாநிலம் கட்டா அருகே, தீவிரவாத அமைப்பான அல்-கொய்தாவுன் தொடர்பு வைந்திருந்ததாக தீவிரவாதி ஒருவரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

கட்டா அருகேயுள்ள ஜகத்புர் நகரில் பதுங்கியிருந்த தீவிரவாதி அப்துல் ரகுமானை போலீஸார் கைது செய்தனர்.

தில்லியிலிருந்து வந்த சிறப்பு போலீஸாரும் புவனேஸ்வர்-கட்டாக் மாநகர போலீஸாரும் இணைந்து நடத்திய சோதனையின் போது ஜகத்புர் நகரின் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் பதுங்கியிருந்த அப்துல் ரகுமான் கைது செய்யப்பட்டதாக, காவல் துறை ஆணையர் ஆர்.பி. சர்மா கூறினார்.

கைது செய்யப்பட்டுள்ள ரகுமானுக்கு சவுதி அரேபியா, பாகிஸ்தான், துபை உள்ளிட்ட நாடுகளில் உள்ள தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும் சர்மா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.