நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பேரவை விவாதத்தின் போது ஆபாச படம் பார்த்த எம்.எல்.ஏ. சஸ்பெண்ட்

ஓடிசா மாநில சட்டப் பேரவை விவாதத்தின்போது ஆபாச படம் பார்த்த குற்றச்சாட்டின் பேரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. நாபா கிஷோர் தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :15 டிசம்பர் 2015, 2:14 pm

ஓடிசா மாநில சட்டப் பேரவை விவாதத்தின்போது ஆபாச படம் பார்த்த குற்றச்சாட்டின் பேரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. நாபா கிஷோர் தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஓடிசா பேரவைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கூட்டத்தின், போது, சார்சுகுடா தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தடுக்கப்பட்ட  நாபா கிஷோர் தாஸ்,  தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்தாராம்.

இது பேரவை நிகழ்வுகளை பதிவு செய்து கொண்டிருந்த தொலைகாட்சி காமிராவில் பதிவானது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் வலியுறுத்தினர்.

இந்நிலையில் இன்று காலை பேரவை கூடியது. அப்பபோது பேசிய பேரவைத் தலைவர் நிரஞ்சன் புஜாரி, காங்கிரஸ் உறுப்பினர் நாபா கிஷோர் தாஸ்,  அவையில் கேள்வி நேரத்தின் போது ஆபாச படம் பார்த்து, அவையின் கண்ணியத்தை கெடுத்து விட்டார். இது மிகவும் கேவலமான செயல், எனவே அவர் பேரவை நடவடிக்கையிலிருந்து ஏழு நாட்கள்  சஸ்பெண்ட் செய்வதாக கூறினார்.

தன் மீதான  குற்றசாட்டை மறுத்த கிஷோர் தாஸ்,  இது எனக்கு  எதிராக செய்யபட்ட சதி என்றார். மேலும், நான்  தற்செயலாக யூடிப்பை ஓப்பன் செய்து விட்டேன். ஸ்மார்ட் போன் அப்படி செயல்படும் என நான் யோசிக்கவில்லை. ஆனால் அந்த இணையதள பக்கத்தில் என்ன இருந்தது என்று எனக்கு தெரியாது என்றார்.

இது எனக்கு எதிரான சதியாகும். நான் எந்த வித விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.