பஞ்சாப் மாநிலத்தில் தலித்துகள் கை வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக மக்களவையில் இருந்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தின்போது, மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிராதித்யா சிந்தியா பேசுகையில், பஞ்சாபில் தலித் சமூகத்தினருக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்து பேசினார்.
பஞ்சாபில் 18 நிமிஷத்துக்கு ஒரு முறை தலித்துகளுக்கு எதிராக சம்பவங்களும், நாள்தோறும் 3 தலித் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், தலித் இளைஞர்கள் இருவரின் கைகள் வெட்டப்பட்டு, கொலை செய்யப்பட்டதையும், தலித் பெண் ஒருவர் பேருந்தால் மோதி கொலை செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அப்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, "நாடாளுமன்றத்தை பயன்படுத்தி, மாநில அரசுகளுக்கு காங்கிரஸ் அவப்பெயர் ஏற்படுத்துகிறது' என்றார்.
பின்னர் பேசிய, பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் மருமகளும், மத்திய அமைச்சருமான ஹர்ஸிம்ரத் கௌர் பாதல், பஞ்சாப் அரசை சீர்குலைக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளது என்றார்.
இரண்டு குழுக்களுக்கு இடையேயான மோதலின்போதுதான், தலித் சமூகத்தைச் சேர்ந்த 2 பேரின் உடல் உறுப்புகள் வெட்டப்பட்டுள்ளன. அந்த சம்பவத்தில், ஜாட் சீக்கியர் ஒருவரின் உடல் உறுப்பும் வெட்டப்பட்டுள்ளது. ஆனால், அதுகுறித்து காங்கிரஸ் கட்சி பேசுவதில்லை. ஏனென்றால் ஜாட் சீக்கியரிடம் காங்கிரஸின் வாக்கு வங்கி இல்லை என்றார். மேலும், இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலரை போலீஸார் தேடி வருகின்றனர் என்றார்.
நாடாளுமன்றத்தில் பஞ்சாப் தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் எழுப்பி, மாநிலத்தின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை போடுகிறது. மேலும், காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையை பஞ்சாபை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர் ஆதரிக்கின்றனர். அவர்கள் மீது நீங்கள் (காங்கிரஸ்) எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
ஹர்ஸிம் ரத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களவையில் இருந்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்காளா்களை ரோஜா மலா் அளித்து வரவேற்ற பெண் ரோபோ

ஆம்புலன்ஸில் வந்து மூதாட்டி வாக்களிப்பு

பாபநாசம் தொகுதி நாதக வேட்பாளா் மீது தாக்குதல் மருத்துவமனையில் அனுமதி

தஞ்சாவூா் மாவட்டத்தில் 80.43 சதவீதம் வாக்குப்பதிவு: முதல்முறை வாக்காளா்கள் உற்சாகம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


