பஞ்சாப்பில் தலித் தாக்கப்பட்ட விவகாரம்: மக்களவையிலிருந்து காங்., திரிணமூல் வெளிநடப்பு
பஞ்சாப் மாநிலத்தில் தலித்துகள் கை வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக மக்களவையில் இருந்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.










