நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

தில்லி முதல்வர் அலுவலகம் சோதனையிடப்படவில்லை: ஜேட்லி

தில்லி அரசு அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கு தொடர்பாகாதன் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்களே தவிர

News image
Updated On :15 டிசம்பர் 2015, 9:30 am

தில்லி அரசு அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கு தொடர்பாகதான் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்களே தவிர, கேஜரிவால் அலுவலத்தில் அல்ல என மாநிலங்களவையில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளித்துள்ளார்.

தில்லியை ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வரான அரவிந்த் கேஜரிவால் அலுவலகத்தில் இன்று காலை மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ) அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இச்சம்பவம் குறித்து மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினர். இந்த சோதனை என்பது கூட்டாட்சி மீதான தாக்குதல் என்றும் நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை நிலவுகிறது என்றும் கோஷமிட்டனர்.

இந்த சோதனை என்பது கட்சிகளுக்கு இடையேயான பிரச்னை இல்லை. இது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ ப்ரைன் கூறினார். ஐக்கிய ஜனதா கட்சி, இடதுசாரி உறுப்பினர்களும் தில்லி முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது அவையிலிருந்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, திரினமூல் உறுப்பினருக்கு தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஊழல் என்பது கூட்டாட்சியின் பிரச்னை அல்ல என்றார். எனினும், அவையில் கூச்சல் குழப்பம் நிலவியல், துணைத் தலைவர் குரியன் அவையை நண்பகல் வரை ஒத்திவைத்தார்.

மீண்டும் அவை கூடியதும், இதே பிரச்னையை எழுப்பிய டெரிக் ஓ ப்ரைன், தில்லி முதல்வர் அலுவலகம் அருகே நடத்தப்பட்ட சி.பி.ஐ. சோதனை குறித்து பேசினார்.

அப்போது பதிலளித்த ஜேட்லி, திரிணமூல் உறுப்பினர் முதலில் தில்லி முதல்வர் அலுவலகத்தில் சோதனை என்ற நிலையிலிருந்து முதல்வர் அலுவலகம் அருகே என்று நிலைக்கு வந்திருக்கிறார் என்றார்.

தில்லி முதல்வர் அலுவலகத்தில் சி.பி.ஐ. நடத்திய சோதனை என்பது, ஜேரிவால் அரசு பதவி ஏற்பதற்கு முன்பே, அதாவது ஆம் ஆத்மி கட்சி ஆட்சி பொறுப்பேற்தற்கு முன்பு, அங்கு பணியாற்றும் அரசு ஊழியர் ஒருவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பானது மட்டுமே என்றார்.

இதனிடையே பேசிய காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், பாஜக அல்லாத மாநில அரசுகளை மத்தியில் ஆளும் பாஜக அரசிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.