பருவநிலை மாநாட்டில் இந்தியாவின் நிலை: இனவிரோத கார்டூன் வெளியிட்ட ஆஸ்திரேலிய நாளிதழ்
பாரீஸில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் இந்தியா மேற்கொண்ட நிலையை கிண்டல் செய்யும் வகையில் ஆஸ்திரேலியா பத்திரிக்கை ஒன்று இனவிரோத கார்டூனை வெளியிட்டுள்ளது.


பாரீஸில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் இந்தியா மேற்கொண்ட நிலையை கிண்டல் செய்யும் வகையில் ஆஸ்திரேலியா பத்திரிக்கை ஒன்று இனவிரோத கார்டூனை வெளியிட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாட்டில், புவி வெப்பமயமாவதை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் குறைக்க வேண்டும். புவி வெப்பமயமாவதைத் தடுக்க 2020-ஆம் ஆண்டுக்கு முதல் வளரும் நாடுகளுக்கு 100 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.6,70,000 கோடி) ஒதுக்கப்படும் என்பது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வளரும் நாடுகளுக்கு சாதகமான அம்சங்கள் அடங்கிய இந்த ஒப்பந்தம் இந்தியா, சீனா, அமெரிக்கா நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்தியா ஆதரவுடன் சர்வதேச அளவிலான சூரிய ஒளி கூட்டமைப்பும் தொடங்கப்பட்டது.
இவற்றை எல்லாம் கிண்டல் செய்யும் வகையில், ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் நாளிதழ் 'தி ஆஸ்திரேலியன்' ஒரு கார்டூன் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியர்கள் சிலர் சூரியஓளி சோலார் பேலன்களை உடைத்து, மாங்காய் சட்னி தொட்டு சாப்பிடுவது போல் உள்ளது.
இணையதளங்களில் வேகமாக பரவி வரும் இந்த கார்டூனுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், இனவிரோதத்தை வளர்க்கும் வகையில் உள்ளது என பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...