டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தாஜ்மகால் அருகே மயானம்: விரிவான திட்டம் தயாரிக்குமாறு உ.பி. அரசுக்கு உத்தரவு

தாஜ்மகால் அருகேயுள்ள 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாயானத்தை சீரமைப்பது தொடர்பாக விரிவான திட்டத்தை தயாரிக்குமாறு உத்தர பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:48 am

PTI

தாஜ்மகால் அருகேயுள்ள 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாயானத்தை சீரமைப்பது தொடர்பாக விரிவான திட்டத்தை தயாரிக்குமாறு உத்தர பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஆக்ரா அருகேயுள்ள 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மயானத்திலிருந்து வெளியேறும் புகையால், தாஜ்மகால் பாதிப்படைகிறது என உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப், உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் குடும்பத்துடன் தாஜ்மகாலுக்கு சுற்றுலா சென்றிருந்த நீதிபதி குரியன், மயானத்திலிருந்து வெளியேறும் புகையால் தாஜ்மகாலின் வெள்ளை மார்பிள் பாதிக்கப்படுவதை கண்டறிந்தார். எனவே, அந்த மயானத்தை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்துக்கு எழுதியிருந்த கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார்.

இப்பிரச்னை குறித்து விளக்கம் அளிக்குமாறு உத்தர பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கு பதில் மனு தாக்கல் செய்த உத்தர பிரதேச அரசு,  அந்த மயானத்தை மின் மயானமாக தகுதி உயர்த்த முடிவு செய்து செய்திருப்பதாகவும், ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் பழைய மயானத்தை அடுத்த ஆண்டு முதல் கைவிடவிருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.எஸ். தாகுர் மற்றும் நீதிபதி சி.நாகப்பன் ஆகியோர், உத்தர பிரதேச அரசு இப்பிரச்னை குறித்து ஆறு மாதத்துக்குள் விரிவான திட்டம் தயாரிக்குமாறு உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.