தாஜ்மகால் அருகே மயானம்: விரிவான திட்டம் தயாரிக்குமாறு உ.பி. அரசுக்கு உத்தரவு
தாஜ்மகால் அருகேயுள்ள 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாயானத்தை சீரமைப்பது தொடர்பாக விரிவான திட்டத்தை தயாரிக்குமாறு உத்தர பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


தாஜ்மகால் அருகேயுள்ள 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாயானத்தை சீரமைப்பது தொடர்பாக விரிவான திட்டத்தை தயாரிக்குமாறு உத்தர பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஆக்ரா அருகேயுள்ள 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மயானத்திலிருந்து வெளியேறும் புகையால், தாஜ்மகால் பாதிப்படைகிறது என உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப், உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் குடும்பத்துடன் தாஜ்மகாலுக்கு சுற்றுலா சென்றிருந்த நீதிபதி குரியன், மயானத்திலிருந்து வெளியேறும் புகையால் தாஜ்மகாலின் வெள்ளை மார்பிள் பாதிக்கப்படுவதை கண்டறிந்தார். எனவே, அந்த மயானத்தை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்துக்கு எழுதியிருந்த கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார்.
இப்பிரச்னை குறித்து விளக்கம் அளிக்குமாறு உத்தர பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு பதில் மனு தாக்கல் செய்த உத்தர பிரதேச அரசு, அந்த மயானத்தை மின் மயானமாக தகுதி உயர்த்த முடிவு செய்து செய்திருப்பதாகவும், ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் பழைய மயானத்தை அடுத்த ஆண்டு முதல் கைவிடவிருப்பதாகவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.எஸ். தாகுர் மற்றும் நீதிபதி சி.நாகப்பன் ஆகியோர், உத்தர பிரதேச அரசு இப்பிரச்னை குறித்து ஆறு மாதத்துக்குள் விரிவான திட்டம் தயாரிக்குமாறு உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...