நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

கேரள முன்னாள் முதல்வர் சிலை திறப்பு விழா: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், பாஜக மோதல்

கேரள முன்னாள் முதல்வர் சிலை திறப்பு விழாவுக்கு முதல்வர் உம்மன் சாண்டி அழைக்கப்படாத விவகாரத்தில் மக்களவையில், பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கடும் வாக்குவாதம்

News image
Updated On :14 டிசம்பர் 2015, 10:08 am

கேரள முன்னாள் முதல்வர் சிலை திறப்பு விழாவுக்கு தற்போதை காங்கிரஸ் முதல்வர் உம்மன் சாண்டி அழைக்கப்படாத விவகாரம் குறித்து மக்களவையில், பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கேரளத்தில் உள்ள ஸ்ரீநாராயணம தர்ம பரிபாலன யோகம் அறக்கட்டளை (எஸ்.என்.டி.பி.) சார்பில் செவ்வாய்க்கிழமை, முன்னாள் முதல்வர் ஆர்.சங்கரின் சிலை திறப்புவிழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சிலையை திறந்து வைக்கிறார். எனினும், இந்நிகழ்ச்சிக்கு மாநில முதல்வர் உம்மன் சாண்டி அழைக்கப்படவில்லை.

இவ்விவகாரம் குறித்து இன்று மக்களையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால், இச்சம்பவம் கேரள மக்களின் உணர்வை புன்படுத்துவதாக உள்ளது. அரசியல் அறநெறிக்கு எதிரானதாகும். ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் தூண்டுதலால் கேரள முதல்வர் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை என்றார்.

மாநில அரசு சார்பில், பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட நிகழ்ச்சி நிரலில் முதல்வர் விழாவுக்கு தலைமை தாங்குவார் என்றும், பிறதமர் சிலையை திறந்துவைப்பார் என்றும் இருந்தது என்றார்

கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான இந்த நடவடிக்கையில் பிரமதர் மோடி வழக்கம்போல் மௌனமாக இருக்கிறார் என்றார்.

இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இது ஆதாரமற்ற அடிப்படை குற்றச்சாட்டு என்றார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் முதல்வருக்கும் இடையேயான உள் விவகாரமாகும். நிகழ்ச்சியை நடத்தும் எஸ்.என்.டி.பி அமைப்புக்கு யாரை அழைப்பது யாரை அழைக்க கூடாது என்ற சுதந்திரம் உள்ளது. இதில் அரசின் தலையீடு இல்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.