இந்தியர்களுக்கான ஜப்பான் விசா நடைமுறையில் தளர்வு
குறுகியகாலம் மட்டும் ஜப்பான் செல்லும் இந்தியர்களுக்கு வழங்கப்படும் விசா நடைமுறையில் தளர்வு அளிக்கப்படும் என ஜப்பான் அறிவித்துள்ளது.


குறுகியகாலம் மட்டும் ஜப்பான் செல்லும் இந்தியர்களுக்கு வழங்கப்படும் விசா நடைமுறையில் தளர்வு அளிக்கப்படும் என ஜப்பான் அறிவித்துள்ளது.
இந்தியா வரும் ஜப்பானியர்களுக்கு, அவர்கள் வந்திறங்கும்போது விசா வழங்கும் முறை வருகிற மார்ச் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என இந்திய அரசு அறிவித்தது.
இதன்பலனாக, ஜப்பான் அரசும், குறுகியகாலம் மட்டும் ஜப்பான் செல்லும் இந்தியர்களுக்கு வழங்கப்படும் விசா நடைமுறையை தளர்த்தி உள்ளது.
தற்போது 15 நாள்களுக்கு மட்டும் வழங்கப்படும் விசா இனி 30 நாள்களுக்கு வழங்கப்படும். மேலும், மூன்றாண்டுகளுக்கான விசா இனி ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுப்படியாகும் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. இது வருகிற ஜனவரி 11 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
இந்தியா வந்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுக்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் இடையே ஏற்பட்ட மக்களுக்குள் ஒருங்கிணைப்பு என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் விசா நடைமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
மேலும், வியாபாரம் மேற்கொள்ளும் இந்தியர்களுக்கு வழங்கப்படும் பலமுறை வந்து செல்வதற்கான விசா தற்போது 5 ஆண்டுகளுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இனி அது 10 ஆண்டாக உயர்த்தப்படும். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இவ்வகை விசாக்களை இந்தியர்களுக்கு ஜப்பான் வழங்கி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...