இந்துகள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து மதத்தவர்களும் பரஸ்பரம் ஒரு மதத்தை மற்றவர்கள் மதித்து நடக்க வேண்டும், பிற மதத்தைத் தூஷிக்கக்கூடாது, மதத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையைச் சீர்குலைக்கக்கூடாது என்று அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு கையெழுத்திடப்பட்டு பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது. ஒருவர் ஒரு குறிப்பிட்ட மதத்தில் தொடர்ந்து நீடிக்கவும், வேறு ஒரு மதத்துக்கு மாறுவது குறித்தும் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. மதமாற்றத்துக்கு நிர்பந்தமோ அல்லது தூண்டுதலோ காரணமாக இருந்துவிடக்கூடாது என்பதுதான் இதன் பொருள். அதைத்தானே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது?